கார்த்திகை மாத மகா
தீபத் திருநாளில் அண்ணாமலையில் நீங்கள் இருப்பதற்கு எவ்வளவோ
புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.
உங்கள் ஜென்ம ஜென்மத்து பாவங்கள்,
கர்ம வினைகள் அனைத்தும் தீப
ஒளியில் பொசுங்கிப் போகும். அவ்வளவு
கூட்டத்தில் ஒழுங்கா சாமி கூட
பார்க்க முடியாதே என்று தோன்றலாம். நம்மாலே பார்க்க முடியலன்னா
என்ன? அவரு நம்மளைப் பார்த்தா
போதாதா என்ன? ஆனால், இந்த
ஒரு நாளை யுகம் யுகமாக
- நம் முன்னோர்கள் வழிபட சொன்னதில் ஆயிரம்
உள்ளர்த்தங்கள் அடங்கி இருக்கலாம். அதனால்
கூட்ட நெருக்கடி, வசதிக் குறைவு என்று
சில விஷயங்களைப் பெரிது படுத்தாமல் , ஜன
சமுத்திரத்தோடு ஐக்கியமாகுங்கள்...! ஒரே ஒரு நொடி
தரிசனம் போதும். இந்த முறை
ஞாயிற்றுக்கிழமை என்பது இன்னொரு வசதி,
இதுக்கு மேலே என்ன வேண்டும்
என்று அண்ணாமலையாரே இந்த வருடத்தில் எல்லோருக்கும்
ஒரு வாய்ப்பு கொடுப்பது போல
இருக்கிறது...!
வருடத்தில்
எந்த நாளில் கிரிவலம் சென்றாலும்
சிறப்புதான் என்றாலும், இந்த கார்த்திகை மாதத்தில்
இன்னொரு முக்கியமான நாளில் கிரிவலம் செல்வது
உங்களுக்கு பல மடங்கு பலன்களை
அள்ளித்தரும். மகிழ்ச்சியும், நிம்மதியும் , விரைவான சில நற்பலன்களையும்
நிச்சயம் உங்களுக்கு கிடைக்க செய்யும்.
நாம் வசிக்கும் ஊரில் ஒரு நாளுக்கு
1,00,000 பேர் வீதம் ஓராண்டு வரை
அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ
அதைவிட அதிகமான புண்ணியம் காசிக்குச்
சென்று ஒரே ஒரு நாள்
மூன்று வேளைகளும் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.
காசிக்குச்
சென்று ஒரு நாளுக்கு 1,00,000 பேர்
வீதம் ஓராண்டு வரை அன்னதானம்
செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ
அதை விட அதிகமான புண்ணியம்
அண்ணாமலையில் ஒரு சாதாரண நாளில்
அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.
நாம் பிறந்தது முதல் நமது இறுதிநாள்
வரையிலும் ஒவ்வொரு நாளும் காசியில்
1,00,00,000 பேர்களுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ
அதைவிட அதிகமான புண்ணியம்,துவாதசி
திதி வரும் நாளில் அண்ணாமலையில்
மூன்று வேளைகளும் ஒருவருக்கு(காலையில் ஒருவர்,மதியம் ஒருவர்,இரவில் ஒருவர்)அன்னதானம்
செய்தால் கிடைத்துவிடும். மேலும், மறுபிறவியில்லாத முக்தி
துவாதசி அன்னதானம் செய்வதாலேயே கிடைத்துவிடும்.இந்த பேருண்மையை சிவமஹாபுராணத்தில்
வித்யாசார சம்ஹிதை தெரிவிக்கிறது.
துவாதசி
திதியும்,சனிப்பிரதோஷமும் சேர்ந்து வரும் நாளில் நமது
ஆன்மீக குருவின் தலைமையில் அன்னதானம் செய்தால் மேலே கூறிய எண்ணிக்கையை
விட ஆயிரம் மடங்கு புண்ணியம்
நம்மை வந்து சேரும்.இதனால்,கடந்த ஐந்து பிறவிகளில்
நாம் செய்த கர்மவினைகளின் தொகுப்பை
அனுபவிக்கவே பிறந்திருக்கிறோம்;நமது அனைத்து கர்மவினைகளும்
நம்மைவிட்டு முழுசாக நீங்கிட இந்த
சொர்ணாகர்ஷண கிரிவலம் ஒரு காரணமாக அமைந்துவிடும்.
ஒரே ஒரு சனிப்பிரதோஷம் அன்று
அண்ணாமலை கிரிவலம் சென்றால்,ஐந்து வருடங்களுக்கு(365 *5 = 1825 நாட்கள்) தினமும் கிரிவலம் சென்றதற்கான
பலன்கள் கிடைக்கும்;மேலும்,சனிப்பிரதோஷ நேரத்தில்
பிரதோஷ அபிஷேகத்தில் கலந்து கொண்டு,பிரதோஷ
நேரம் நிறைவடைந்த பின்னர் அண்ணாமலையாரை தரிசனம்
செய்தால் 1825 நாட்களுக்கு தினமும் அண்ணாமலையாரை தரிசனம்
செய்த புண்ணியம் கிடைக்கும் என்பதை சித்தர்களின் தலைவரான
கும்பமுனி தனது பாடல்களில் தெரிவிக்கிறார்.
சுவாதி
நட்சத்திரமும்,சனிப்பிரதோஷமும் சேர்ந்து வருவது பல ஆண்டுகளுக்கு
ஒருமுறையே வரும் ஓர் அற்புத
நிகழ்வாகும்;அத்துடன் துவாதசி திதியும் சேர்ந்து
வருவது சில நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை
வரும்;அதையே சொர்ணாகர்ஷண கிரிவலநாள்
என்று அண்ணாமலை ஏடு தெரிவிக்கிறது.இந்த
நன்னாளில் நமது குருவுடன் கிரிவலம்
செல்பவர்கள் பலத்த பூர்வபுண்ணியம் மிக்கவர்கள்
என்றும்,அவர்களின் கர்மவினைகள் மழையில் கரையும் உப்பைப்
போல கரைந்து காணாமல் போய்விடும்
என்றும் விவரிக்கிறது.
30.11.2013 சனிக்கிழமை
அன்று துவாதசி திதியும், சனிப்பிரதோஷமும்,
சுவாதி நட்சத்திரமும் சேர்ந்து இப்பேர்ப்பட்ட பெருமைகளுடன் வர இருக்கிறது.இந்த
நன்னாளில், கிரிவலப் பயணம் புறப்படும்போது, ஐந்து
கிலோ நவதானியங்களையும்,ஒரு கிலோ டயமண்டு
கல்கண்டையும் உடன் கொண்டு புறப்படுவோம்;
கிரிவலப்
பயணத்தின் போது ஓம் அண்ணாமலையே
போற்றி என்றோ அல்லது ஓம்
அருணாச்சலாய நமஹ என்றோ ஜபித்துக்
கொண்டே செல்வோம்;ஏனெனில்,ஒரே ஒருமுறை
ஓம் அண்ணாமலையே போற்றி என்றோ அல்லது
ஓம் அருணாச்சலாய நமஹ என்றோ ஜபித்தாலே
3,00,000 தடவை ஓம் நமச்சிவாய என்று
ஜபித்தமைக்கான பலன்கள் கிட்டும் என்று
அண்ணாமலையாரே உபதேசித்திருக்கிறார். எனவே,இதைத்தவிர, வேறு
எந்த வீண்பேச்சும் பேசாமல் கிரிவலம் செல்வோம்;
கிரிவலப்பயணத்தின் போது இட்லி தானம்
செய்வோம்;நாம் கொண்டு செல்லும்
ஐந்து கிலோ நவதானியங்களையும் நமது
கைகளால் கிரிவலப்பாதையின் ஓரங்களில் தூவுவோம்;தற்போது மழைக்காலமாக இருப்பதால்
நம்மால் தூவப்பட்ட நவதானியங்கள் விரைவில் செடிகளாக வளரத் துவங்கும்;அவ்வாறு
வளரத்துவங்கியதும்,நமது அனைத்து கிரக
தோஷங்களும் நம்மை விட்டு நீங்கிவிடும்;
நாம் கொண்டு வரும் டயமண்டு
கல்கண்டுகளை கிரிவலப் பாதையில் தூவுவோம்;ஒரே ஒரு டயமண்டு
கல்கண்டை ஒரே ஒரு எறும்பு
எடுத்துச் சென்றாலே நாம் நூறு அந்தணர்களுக்கு
தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கு அன்னதானம்
செய்த பலன் நமக்குக் கிட்டும்;இதனால்,சனியின் தாக்கம்
நம்மை விட்டு முழுமையாக நீங்கிவிடும்
என்பது நமது ஆன்மீக குரு
திரு.சகஸ்ரவடுகர் அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சி முடிவு!
மதியம்
2 மணிக்குள் கிரிவலம் நிறைவடைந்த பின்னர்,மாலையில் நடைபெற
இருக்கும் சனிப்பிரதோஷ அபிஷேகத்தில் கலந்து கொள்வோம்;இரவு
பள்ளியறை பூஜை வரையிலும் அண்ணாமலையாரின்
ஆலயத்தினுள் இருந்தாலே நமது நியாயமான கோரிக்கைகளும்,வேண்டுதல்களும் நிறைவேறத் துவங்கும்;பல ஆண்டுகளாக நமக்கு
இருந்துவரும் கர்மவினைகளும்,சிரமங்களும் முழுமையாக விலகிவிடும்.பள்ளியறை பூஜை நிறைவடைந்ததுமே நேராக
(வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமலும்,யார் வீட்டிற்கும் செல்லாமலும்)
நமது சொந்த ஊருக்குத் திரும்புவோம்;
இதன் மூலமாக சொர்ணாகர்ஷண கிரிவலத்தின்
பலன்கள் அடுத்த சில நாட்களில்
நம்மை வந்து சேரும்;சிலருக்கு
சில வாரங்களுக்குள் வந்து சேரும்.
ஓம் அருணாச்சலாய நமஹ!!!
ஓம் அண்ணாமலையே போற்றி!!!
No comments:
Post a Comment