Saturday 30 July 2011

சிம்ம ராசியா உங்களுக்கு ? அவசியம் இதைப் படியுங்கள் ...!!!



http://images.nationalgeographic.com/wpf/media-live/photos/000/004/cache/african-lion-male_436_600x450.jpg

சமீபத்தில் எனக்கு மிகவும் வேண்டப்பட்ட நண்பர் ஒருவரை சந்தித்தேன். கோபுரத்தில் இருக்க வேண்டிய ஒரு கலசம், குப்பை மேட்டில் தூக்கி எறியப்பட்டால் எப்படி இருக்கும்? அதைப் போல இருந்தது அவரது நிலமை. 

சும்மா சொல்லக் கூடாது. விதி அவரை தூக்கிப் பந்தாடி இருக்கிறது. அவரது திறமைக்கும், அறிவுக்கும் அவர் புகழின் உச்சியில் இருக்க வேண்டியவர். ஏனென்றால் அப்படி இருந்தவர் . ஒரு ஆறு வருடம் முன்பு வரை. ஆனால் இப்போது? சிங்கம் இளைத்து இருந்தால் , வலுவிழந்து இருந்தால் சுண்டெலி கூட அதன் மேல் ஏறி , இறங்கி விளையாடுமாம்.  அப்படி இருக்கிறது நிலமை இப்போது. வீட்டிலும் சரி , அலுவலகத்திலும் சரி --- உயரத்தில் இருந்து அதல பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது . அவருக்கும், அவரைப்போலே இருக்கும் அத்துணை மனிதர்களுக்கும் இந்த கட்டுரை - ஒரு மிகப் பெரிய திருப்பு முனையாக அமையும். எப்படி ...? பார்ப்போம்.

கண்கலங்க அவர் என்னைப் பார்த்து, " குருஜி  ,  குரு பகவான் என்னைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார் , இனிமேல் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற நீங்கள் அளித்த நம்பிக்கையில் தான் இன்னும் வண்டி ஓடுகிறது. ஆனால் , இது வரை இன்னும் நிலமை சரி ஆக வில்லை. எப்போதான் இதற்க்கு விடிவு?". அவருக்கு விரைவில் நலமும் , வளமும் பெற - அவருக்கு நான் அறிவுறுத்திய விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்ள விருக்கிறேன். 

மகம் - ஜெகமாளும் என்கிற கூற்றுப்படி , மக நட்சத்திரத்தில் பிறந்த சிம்ம ராசி அன்பர் அவர். மகம் , பூரம் , உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த சிம்ம ராசி நேயர்களுக்கு - ஏழரை சனி ,முடிந்தவரை  பந்தாடி விட்டு  - " எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் .... இவன் ரொம்ப நல்லவன்டானு " இப்போதான் இரக்கப்பட ஆரம்பித்து இருக்கிறார்.   எந்த வித கவலையும் இனிமேல் உங்களுக்கு கிடையாது. 

குடும்பம், வியாபாரம், அலுவலகம் என உங்களைப் பாடாய் படுத்தி மன நிம்மதியை குலைத்து , தூக்கமின்றி தவியாய் தவிக்க விட்ட நாட்கள் இனிமேல் இருக்காது. எவ்வளவுதான் நீங்கள் பணம் வைத்து இருந்தாலும், அத்தனையும் இழந்து , நம்பியவர்களில் ஒருவர் விடாமல் முதுகில் குத்து வாங்கி , கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கும். அவமானம், தலைகுனிவு, நஷ்டம், தோல்வி , பெற்றோர் அல்லது மிகவும் வேண்டப்பட்டோர் , உயிரையே வைத்து இருந்தவர்களின் இழப்பு / பிரிவு என்று அவரவர் சக்திக்கேற்ப , அடிமேல் அடி வாங்கி இருப்பீர்கள் . ஒரு சிலர் தற்கொலை கூட பண்ணிக்கொள்ளலாமா என்று கூட என்னும் அளவுக்கு , தோல்வி , விரக்தி உச்சத்தில் இருந்து இருக்க கூடும். 
 
இந்த நிலமை அப்படியே தலை கீழாய் மாறும் இனி. சமீபத்தில் இதன் அறி குறிகள் ஏற்கனவே ஒரு சிலருக்கு தெரிந்து இருக்கும். கடவுள் நல்லவங்களை சோதிப்பான் . கைவிட மாட்டான்னு சொல்ற மாதிரி , அவனுக்கு தெரியும், இனி உங்களை குளிர வைப்பது எப்படி என்று. பழுக்க காய்ச்சிய இரும்பு மெல்ல மெல்ல குளிர வைத்த பிறகு, காலம் முழுவதும் வலுவுடன் உபயோகப்படுவது மாதிரி . இதை அனீலிங் என்று கூறுவார்கள் பொறியியல் துறையில் . அந்த இரும்பு அதற்கு பிறகு உடைவது கடினம். அதைப்போலே பக்குவம் உங்களுக்கு ஆண்டவன் கொடுத்து இருப்பதாக எண்ணி , தேற்றிக்கொள்ளுங்கள். இழப்பதற்கு இனிமேல் ஒன்றும் இல்லை என்ற நிலைமையில் இருந்து , இனி நீங்கள் நினைத்த எல்லாம் நிறைவேற்றப் போகிறீர்கள். 

நவ கிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் தனது பார்வையை உங்கள் மேல் பதிக்க ஆரம்பித்து விட்டார். நீங்கள் இன்னும் எட்டு மாதங்களுக்குள் , உங்கள் இந்த கால கட்டத்தில் இழந்த செல்வம் அனைத்தும் உங்களுக்கு திரும்ப வரும். பிரிந்து போனவர்களை பற்றி நீங்கள் வருந்த வேண்டியதில்லை. அவர்கள் தினமும் இனிமேல் வாழ்நாள் முழுவதும், அவர்கள் செய்த தவறை எண்ணி மனம் வெதும்புவார்கள். அவர்கள் திரும்ப வருகிறார்களோ, இல்லையோ - உங்கள் காலடியில் விழுந்து மன்னிப்பு கேட்பார்கள்.அவர்கள் இனி , நெருங்க முடியாத இடத்திருக்கு நீங்கள் உயரத்தில் செல்வது உறுதி. 

இந்த எட்டு மாதக் கணக்கு என்பது , இனி நான் சொல்லும் விஷயங்கள் கடைபிடிக்க இருப்பவர்களுக்கு. அதை செய்யாத சிம்ம ராசிக்காரர்களும் , கண்டிப்பாக முன்னுக்கு வருவது உறுதி. ஆனால் இன்னும் சற்று கால தாமதமாகும். மிகச் சரியாக , இந்த பொன்னான நேரத்தை பயன் படுத்திக் கொள்வது உங்கள் கைகளில். 

என்ன செய்ய வேண்டும் ஏற்றம் பெற ?

1 )  முதன் முதலில் நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது - உங்கள் குல தெய்வ வழிபாடு. நீங்கள் பிறந்த நாள் (ஆங்கில பிறந்த தேதி அல்ல) -தமிழ் மாதம் ,  நட்சத்திர , திதி வரும் நாட்களில் , ஒவ்வொரு வருடமும், நீங்கள் குல தெய்வம் அருகில் ஒரு மணி நேரமாவது இருந்தே ஆக வேண்டும். தவிர்க்க முடியாத காரணத்தால் , செல்ல இயலவில்லை என்றால் - உங்களைப் பெற்றவர்கள் இருந்தால் , அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ளுங்கள். இதற்குப் பின்புலமாக - ஒரு மிகப் பெரிய கால ரகசியம் உள்ளது. 

2 ) குல தெய்வ வழிபாடு முடிந்ததும் - நீங்கள் செய்ய வேண்டியது , எவ்வளவு விரைவில் முடியுமோ , அவ்வளவு விரைவில் - திருநள்ளாறு ஒருமுறை சென்று முறைப்படி சனி பகவானுக்கு பரிகாரம் செய்து கொள்ளவும். தினமும்  காலை உணவு எடுத்துக் கொள்ளும் முன்பு , காகத்திற்கு உணவு வைத்துப் பின் சாப்பிடவும். உங்கள் மூதாதையர்களின் ஆசி முழுவதும் கிடைக்கும். 


3 ) அதன் பிறகு - இப்போது உங்களுக்கு நடக்கும் தசை என்ன என்று பாருங்கள். பெரும்பாலானோருக்கு சந்திர தசை , செவ்வாய் தசை அல்லது ராகு தசை நடக்கும் . இந்த தசா அதிபதிகளின் ஸ்தலங்களுக்கு - ஒரு முறை சென்று வாருங்கள். ஏற்கனவே நம் கட்டுரைகளில் சந்திர தசை , ராகு தசை பற்றி - மிக விரிவாக கொடுத்து இருக்கிறோம். அந்த ஸ்தலங்களுக்குரிய தெய்வங்களுக்கு , முறைப்படி வழிபாடு , பரிகாரம் செய்து கொள்ளவும்.உங்கள் லக்கினம் எதுவென்று பார்த்து அந்த இலக்கின அதிபதியின் ஸ்தலத்துக்கும் சென்று , மனமுருகி வேண்டி வருவது அவசியம்.

4 ) அதன் பின், நீங்கள் பிறந்த நட்சத்திரம் எதுவென்று பார்த்து   , அது தேவதைகளாக மாற வழிபட்ட ஸ்தலங்கள் உள்ளன. இதையும், நமது பழைய கட்டுரை யில் கொடுத்துள்ளேன். இங்கும் ஒருமுறை சென்று வாருங்கள். 

5 ) அதன் பிறகு, இனிமேல் வாழ்நாள் முழுவதும் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட தினத்தில் - விரதம் இருந்து , உங்கள் இஷ்ட தெய்வ வழிபாடு மேற்கொள்ளுங்கள். அது , பௌர்ணமி யாக இருக்கலாம், அமாவாசையாக இருக்கலாம் . ஏகாதசி , கார்த்திகை, பிரதோஷம் - அல்லது நீங்கள் பிறந்த நட்சத்திரம் வரும் தினம் என்று ஏதாவதொரு தினமாக இருக்கலாம். 
உங்கள் பெற்ற , தாய் அல்லது தந்தை இறந்து இருந்தால் - அமாவாசை அன்று விரதம் இருந்து அவர்களை வழிபாடு செய்தல் நலம். 

விரதம் என்பது - உங்களை ஒரு நெறிபடுத்த , ஒரு ஒழுங்கைக் கொண்டு வர மட்டுமே. இஷ்டம் போல் ஒரு வாழ்க்கை வாழ்ந்து , அதன்பின் கிடைத்த ஒரு இழி நிலை திரும்ப வராமல் இருக்க மட்டுமே. அந்த நேரத்தில் உங்களுக்கு கிடைக்கும் அருள் - உங்களுக்கு மிகப் பெரிய கவசமாக இனி அமையவிருக்கிறது.

6 ) உங்கள் மாத வருமானத்தில் - ஒரு நாள் சம்பளத்தை , உங்கள் குல தெய்வ கோவிலுக்கு கொடுக்கும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். மாதா மாதமோ அல்லது மொத்தமாக வருடத்திற்கு ஒரு முறையோ கொடுங்கள். இது தவறாமல் செய்ய வேண்டிய வழக்கம். 

7 ) இந்த ஏழரை சனி நடந்த காலத்தில் - பெரும்பாலானோருக்கு -முறை தவறிய தொடர்பு ஏற்பட்டு இருக்கலாம். விதியின் மேல் பழி போட்டு, விபரீதங்களை விலைக்கு வாங்கிய நீங்கள் -  மறந்தும் , அதைப் போன்ற சாக்கடை சமாச்சாரங்களை தொடரவேண்டாம். ராஜ வாழ்க்கை வாழ வேண்டியவர் நீங்கள். நடந்த சம்பவங்கள் , நல்ல பாடம் என்று எடுத்துக் கொள்ளுங்கள். குடிப்பழக்கம், மாமிச உணவு உட்கொள்ளும் பழக்கம் இருப்பவர்கள் , எவ்வளவு சீக்கிரம் விடுகிறீர்களோ , அவ்வளவு நல்லது. 

8 )  திறமை இருக்கும் இடத்தில் கோபமும், அதிகாரமும் தூள் பறக்கும். அதனால் உங்களுக்கு கிடைத்த பலன்களை நீங்களே உணர்ந்து இருப்பீர்கள். புன்முறுவலும், சாந்தமும் - உங்களுக்கு எதிரிகளையும் நண்பர்களாக்கும்.

9 ) இந்த வருடம் கார்த்திகை தேய்பிறை காலத்தில் வரும் குபேர கிரிவலத்திற்கு - திருவண்ணாமலை சென்று வாருங்கள். விவரங்களுக்கு , நமது முந்தைய கட்டுரைகளை refer செய்யவும். உங்களால் முடிந்தவரை கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி வாருங்கள். பணம் நீங்கள் போதும் என்று சொல்லுமளவுக்கு வருவது நிச்சயம்.

10 ) உங்கள் ராசிக்கு அதிபதியாக சூரிய பகவான் வருவதால் , சூரிய உதயத்திற்கு முன் தூங்கி எழுந்து, குளித்து முடித்து - சூரியனை நீங்கள் வரவேற்பது அவசியம். அந்த அதிகாலை வேளையில் , உங்கள் மனதில் எழும் எண்ணங்கள் , உங்கள் புதிய பாதையை தீர்மானிக்கும். இயல்பிலேயே உங்கள் துறையில் சற்று கூடுதல் திறமையுடன் நீங்கள் இருப்பீர்கள் . ஆனால் அதே நேரத்தில் திட்டமிடாமல் , மெத்தனமும், சோம்பேறித்தனமும் உங்கள் கூடவே இருப்பதால் , கடைசி வரை எந்த செயலானாலும் இழுபறி ஏற்பட்டு , கடைசி நிமிடத்தில் முடிப்பீர்கள். இந்த ஒரு குணமும் மாற , உங்களுக்கு இந்த சூரிய நமஸ்காரம் வழிகாட்டும்.

மேற்கூறிய இந்த 10 முறைகளும், மற்ற ராசிக்காரர்களுக்கும் பொருந்தும். உங்கள் ராசி , லக்கினத்துக்கேற்ப - எந்த தெய்வத்தை வழிபடுவது என்பதில் வேண்டுமானால் மாற்றம் இருக்கலாம்.

சிம்ம ராசிக்கார நேயர்களே, நீங்கள் விரைவில் உங்கள் இழந்த பெருமையை மீட்டு , புகழின் உச்சியில் இருக்கப் போவது உறுதி. உங்கள் பொன்னான வாழ்வு  நிலைத்திருக்க - அந்த நேரத்தில் மீண்டும் அகந்தை தலை தூக்காது, எல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்ற எண்ணம் நிலைக்கும்படி பணிவுடன் , பொறுமையுடன் , முடிவுகளை எடுங்கள்.

வாழ்க  வளமுடன் !

மனிதனை துடிக்க வைக்கும் - ஏவல் , பில்லி , சூனியம் ! இதெல்லாம் நிஜமா ? இல்லை ஏமாற்று வித்தையா ?




சிலவகை மந்திரங்களை உச்சாடனம் செய்து உருவேற்றி அதன்மூலம் தங்கள் விரோதிகளுக்கு, அல்லது தாங்கள் விரும்பாதவர்களுக்கு பல பாதிப்புகளை ஒருவரால் ஏற்படுத்த முடியும். அந்த வகை மந்திரங்களுக்கு ’அபிசார மந்திரங்கள்’ என்று பெயர். இவை அதர்வண வேதத்தில் உள்ளன. தமிழிலும் பல ஓலைச்சுவடிகளில் இதுபற்றிய குறிப்புகள் உள்ளன. கேரளாவில் இருக்கும் மாந்த்ரீகர்கள் இவற்றில் தேர்ந்தவர்கள்.

இதுபற்றி, “அதர்வண வேதத்தின் இரண்டாம் பிரிவைச் சார்ந்த மந்திரங்கள் எண்ணிறந்தவை. இவை பெரும்பாலும் பேய் முதலியவற்றை விரட்டி ஓட்டுவன. சில சபிப்பன. சில காதலர்க்கிடையே ஊடல், பிணக்கு முதலியவற்றைத் தோற்றுவிப்பன. சில மனைவியைத் திரும்ப கணவனிடம் சேர்ப்பன. சில உறக்கத்தை உண்டு பண்ணுபவன. சில விருப்பமில்லாத ஆடவனிடத்து அல்லது பெண்ணிடத்துக் காதலைத் தோற்றுவிக்கும் வலிமை உடையன. ஒருவனது படத்தின் துணைக் கொண்டு அவனைத் தன்வயமாக்கவும், அவனுக்குத் தீங்கிழைக்கவும் வல்ல மந்திரங்கள் சில.  …………..  சில பாடல் பெண்ணைக் கருவுறச் செய்யாது தடுப்பதற்கும், ஆடவனை ஆண்மை குன்றியவனாக ஆக்குவதற்கும் ஆற்றல் படைத்தவை. இப்பாடல்கள் எல்லாம் அங்கிரஸர்களுடன் தொடர்புபட்டவை. இதுவரை கூறியவாறு சபிப்பன சில; கெடுப்பன சில; சத்துருக்களையும், மாந்திரீகர்களையும் அழிப்பன சில. இவற்றிற்கு அபிசாராணி என்று இன்னொரு பெயரும் உண்டு.“ என்கிறார் டாக்டர் கா. கைலாசநாதக் குருக்கள், தனது வடமொழி இலக்கிய வரலாறு என்னும் நூலில். (நர்மதா பப்ளிகேஷன்ஸ்)

மந்திரங்கள் என்பவை ஒலி அதிர்வு உடையவை. அவை ஒரு மனிதனின் எண்ண ஆற்றல்களில் மாற்றங்களை ஏற்படுத்த வல்லவை. தீய மந்திர உச்சாடனங்களால் தீய அதிர்வலைகள் ஏற்பட்டு அவை ஒரு மனிதனைக் குழப்பி தவறான முடிவுகளை எடுக்க நேரிடும். இதுதான் ஏவல் எனப்படுகிறது. ஏவல் என்றால் ஏவி விடுதல் என்பது பொருள்.

சூனியம் என்பதற்கு ஒன்றுமில்லாதது என்று பொருள். ஒரு மனிதனின் மனதைக் குழப்பி அவனை ஒன்றுமில்லாமல் ஆக்குவதே, அவனைச் செயல்பட முடியாதபடி முடக்குவதே சூனியம். பில்லி என்பதும் இந்த வகையைச் சேர்ந்ததே.
பொதுவாக மனச்சோர்வு உற்றவர்களும், தன்னம்பிக்கை குறைந்தவர்களும், கர்மவினைப் பாதிப்புகள் அதிகம் உள்ளவருமே இவற்றால் பாதிக்கப்படுகின்றனர். என்றாலும் சிலசமயங்களில் எதிரிகளின் பொறாமை, தீய வன்மம் போன்றவற்றின் காரணமாக, புனிதர்களும், மகான்களும் கூட இவற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும்.

சில சம்பவங்களைப் பார்ப்போம்.

அரவிந்தர் ஆசிரமத்தில் ஒருநாள்… புதுச்சேரி வந்த ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் மற்றும் பிற சாதகர்கள் தங்கியிருந்த இல்லத்திலேயே தங்கினார். அதை ஒரு முழுமையான ஆசிரமமாக்கும் வளர்ச்சிப் பணியில் ஈடுபட்டார். உடன் தத்தா என்ற தோழியும் இருந்தார். இவர்களது வீட்டு வேலைகளைக் கவனிக்க ஓர் வேலையாள் இருந்தான். அவன் ஐரோப்பியப் பெண்கள் தானே என நினைத்து எதிலும் அலட்சியமாக நடந்து கொண்டான். தத்தாவிடம் அடிக்கடி மரியாதைக் குறைவாக நடக்கலானான். யாரையும் மதிக்கவில்லை. தொடர்ந்து பல தவறுகள் செய்து வந்தான். அவனால் அடிக்கடிப் பிரச்னைகள் ஏற்பட்டு வந்தது. பல முறை கண்டித்தும் அவன் திருந்தாததால் அன்னையும் தத்தாவும் அவனை வேலையை விட்டு நீக்கினர்.

பொறாமைக்காரனான அவன் ஒரு மந்திரவாதியை அணுகினான். ஸ்ரீ அன்னை மற்றும் தத்தாவைப் பழிவாங்குவதற்காக தீவினையை ஏவி விட்டான். அது முதல் அடிக்கடி அவர்கள் தங்கி இருந்த அந்த வீட்டில் கற்கள் வந்து விழ ஆரம்பித்தன. இது பல நாட்கள் தொடர்ந்தது. யாராலும் காரணம் என்னவென்று அறிய இயலவில்லை. எது செய்தும் தடுக்க முடியவில்லை. சரமாரியாகக் கற்கள் வந்து விழுந்து கொண்டே இருந்தன.
ஒரு நாள் தீவினையின் தொல்லை பொறுக்க முடியாமல் போகவே பொறுமை இழந்த அன்னை அதற்கான மூல காரணத்தைக் கண்டறிய விழைந்தார். தனித்தமர்ந்து ஆழ்நிலை தியானத்தில் மூழ்கினார். தியானத்தின் மூலம் நீக்கப்பட்ட வேலைக்காரன்தான் இவற்றிற்குக் காரணம் என்பது தெரியவந்தது. அவனுக்கு இணைப்புச் சக்தியாக அந்த வீட்டிலுள்ள ஓர் வேலைக்காரச் சிறுவன் இருக்கிறான் என்பதையும் ஸ்ரீ அன்னை கண்டறிந்தார். உடனடியாக அந்தச் சிறுவனை வேறு இடத்திற்கு மாற்றினார். அதுமுதல் அந்தத் தீவினை தொடர முடியாமல் செயலிழந்தது.

ஆனால் அது ஏவிய அந்த வேலைக்காரனைச் சென்று பாதித்தது. அவன் கை, கால்கள் செயலிழந்து படுத்த படுக்கையானான். அதனால் மிகவும் மனம் கலங்கிய அவன் மனைவி ஸ்ரீ அன்னையையும் ஸ்ரீ அரவிந்தரையும் சந்தித்து, அவனது தீச்செயலை மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டாள். ஸ்ரீ அரவிந்தரும், ”அவன் ஏதோ ஆத்த்திரத்தில் அறியாமல் செய்து விட்டான். அவனை மன்னிப்போம்” என்றார், ஸ்ரீ அன்னையிடம். அன்னையும் அவனை மன்னித்தார். அதுமுதல் அத்துன்பம் நீங்கி உடல், மனத் தெளிவு பெற்றான் அந்த வேலைக்காரன்ன். ஸ்ரீ அரவிந்தரின் பக்தராகவும் மாறிப் போனான்.

மேற்கண்ட சம்பவம் மூலம் நமக்குத் தெரிவது என்ன? ஏவல் பில்லி சூனியம் என்பதெல்லாம் பொய்யல்ல என்பதும், சிலவகை மந்திரங்களை உச்சாடனம் செய்து உருவேற்றி அதன்மூலம் தங்கள் விரோதிகளுக்கு, அல்லது தாங்கள் விரும்பாதவர்களுக்கு பல பாதிப்புகளை ஒருவரால் ஏற்படுத்த முடியும் என்பதும் தெரிய வருகிறதல்லவா?


பாம்பன் சுவாமிகள்
பாம்பன் சுவாமிகள் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பத்தைப் பார்ப்போம்.  சுவாமிகள் சிதம்பரத்தில் தங்கி இருந்த காலம். சைவத்தை சிலர் தூற்றியதால், சுவாமிகளுக்கும் அவர்களுக்கும் பகை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தது. வழக்கின் முடிவில் சுவாமிகளே வென்றார். அதனால் வன்மம் கொண்ட பகைவர்கள், சுவாமிகளின் மீது தீவினையை ஏவி விட்டனர். முருகன் அருளால், அந்தத் தீவினை, ஏவி விட்டவனையே சென்று தாக்குமாறுச் செய்தார் சுவாமிகள்.
இதனை,
“……………. தில்லை பின்னை வாழ்
குடில நாமர்கள் கொடிய சூனியம்
ஊட்டி னார் கொலற் கேயஃதுங் கெடுத்
துவகை செற்றுலா மவர்வ ழக்கெலாம்
ஒட்டி யேயெனக் கீந்த வென்றியிவ்
வுலகு கூறுமே யலகில் வேன்முதால்.”
-என்ற அவருடைய ’குமாரசுவாமியம்’ பாடல் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கந்தர் சஷ்டிக் கவசத்தில் வரும், “பில்லி சூனியம் பெரும்பகை அகல…” என்று வரும் வரிகளும் இது போன்ற தீச்செயல்கள் மனிதரைப் பாதிக்கும் என்பதை உறுதி செய்கிறது. ஸ்ரீ பாம்பன் சுவாமிகளும் தனது சண்முக கவசத்தில் இது குறித்துத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ சங்கரர்
சங்கரர், ராமானுஜர் இருவருமே இந்தத் தீய அபிசார மந்திரங்களால் தங்கள் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டனர் என்பதை அவர்களது வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ஸ்ரீ சங்கரரிடம் வாதில் தோற்ற அபிநவ குப்தன், அவர் மீது தீவினையை ஏவி விட்டான். அதனால் பலத்த பாதிப்புக்குள்ளானார் ஸ்ரீ சங்கரர். பின்னர் திருச்செந்தூர் வந்து முருகப்பெருமானை வணங்கி,  ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம் பாடி தன் நோய் நீங்கப் பெற்றார். அது போல சமணர்கள் செய்த துன் மந்திரவாதத்தால் பல சைவர்கள் பாதிக்கப்பட்டதையும் நாம் பெரிய புராணம் வழியாக அறியலாம். அவர்களை தனது இறையாற்றல் மூலம் வென்றார் ஞான சம்பந்தர் என்பதையும் நாம் அறிய முடிகிறது.

ஆக, ஏவல், பில்லி, சூனியம் என்பதெல்லாம் உண்மைதான் என்பதை இவற்றின் மூலம் உணர முடிகிறது. அதே சமயம் ஏவல் வைக்கிறேன், எடுக்கிறேன் என்றெல்லாம் கூறி ஆன்மீகத்தின் பேரில் மக்களை ஏமாற்றும் சாமியார்களிடமிருந்தும் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.

காசு ஒன்றையே குறியாகக் கொண்ட இந்தச் சாமியார்கள், போலி ஆன்மீகவாதிகள், மாந்த்ரீகர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள், அதிலிருந்து எப்படித் தப்பிப்பது, ஒருவேளை தனக்கு ஏவல், பில்லி, சூனியம் யாராவது வைத்து விட்டதாகக் கருதினால் அல்லது அப்படி நம்பினால் அதிலிருந்து விடுபடுவது எப்படி? நமது  முந்தைய பதிவுகளில் இதைப் பற்றி நிறையவே விளக்கியுள்ளேன். சரபேச அவதார மகிமை என்ற கட்டுரையை திரும்பவும் படித்துப் பாருங்கள். 

எதுவாக இருந்தாலும் உள்ள உறுதியுடன், தன்னம்பிக்கையுடனும், இறை நம்பிக்கையுடனும், உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்தால் எப்பகையையும் வெல்ல முடியும் என்பது உண்மை.

இது சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் , மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் 

pilgrimage to ''KAILASH'' - must see





















Thursday 28 July 2011

108 Names Of Lord Ganesh


1.Akhuratha- One who has Mouse as his
Chariot/Vehicle
2.Alampata- Ever Eternal Lord
3.Amit- Incomparable Lord
4.Anantachidrupamayam- Infinite and Consciousness
Personified
5.Avaneesh- Lord of the whole World
6.Avighna -Remover of Obstacles
7.Balaganapati- Beloved and Lovable Child
8.Bhalchandra- Moon-Crested Lord
9.Bheema -Huge and Gigantic
10.Bhupati- Lord of the Gods
11.Bhuvanpati -God of the Gods
12.Buddhinath- God of Wisdom
13.Buddhipriya- Knowledge Bestower
14.Buddhividhata- God of Knowledge
15.Chaturbhuj- One who has Four Arms
16.Devadeva- Lord of All Lords
17.Devantakanashakarin- Destroyer of Evils and Asuras
18.Devavrata -One who accepts all Penances
19.Devendrashika- Protector of All Gods
20.Dharmik- One who gives Charity
21.Dhoomravarna- Smoke-Hued Lord
22.Durja -Invincible Lord
23.Dvaimatura -One who has two Mothers
24.Ekaakshara- He of the Single Syllable
25.Ekadanta -Single-Tusked Lord
26.Ekadrishta- Single-Tusked Lord
27.Eshanputra -Lord Shiva's Son
28.Gadadhara- One who has The Mace as His
Weapon
29.Gajakarna- One who has Eyes like an elephant
30.Gajanana -Elephant-Faced Lord
31.Gajananeti -Elephant-Faced Lord
32.Gajavakra- Trunk of The Elephant
33.Gajavaktra- One who has Mouth like an
Elephant
34.Ganadhakshya- Lord of All Ganas
35.Ganadhyakshina- Leader of All The Celestial
Bodies
36.Ganapati- Lord of All Ganas
37.Gaurisuta- The Son of Gauri
38.Gunina -One who is The Master of All
Virtues
39.Haridra- One who is Golden Colored
40.Heramba- Mother's Beloved Son
41.Kapila -Yellowish-Brown Colore
42.Kaveesha- Master of Poets
43.Kirti- Lord of Music
44.Kripalu- Merciful Lord
45.Krishapingaksha- Yellowish-Brown Eyed
46.Kshamakaram- The Place of Forgiveness
47.Kshipra -One who is easy to Appease
48.Lambakarna- Large-Eared Lord
49.Lambodara- The Huge Bellied Lord
50.Mahabala -Enormously Strong Lord
51.Mahaganapati -Omnipotent and Supreme Lord
52.Maheshwaram- Lord of The Universe
53.Mangalamurt-i All Auspicious Lord
54.Manomay -Winner of Hearts
55.Mrityuanjaya- Conqueror of Death
56.Mundakarama- Abode of Happiness
57.Muktidaya- Bestower of Eternal Bliss
58.Musikvahana- One who has Mouse as His
Charioteer
59.Nadapratithishta -One who Appreciates and
Loves Music

60.Namasthetu- Vanquisher of All Evils and
Vices and Sins
61.Nandana -Lord Shiva's Son
62.Nideeshwaram- Giver of Wealth and Treasures
63.Omkara- One who has the Form Of OM
64.Pitambara -One who has Yellow Colored
Body
65.Pramoda -Lord of All Abodes
66.Prathameshwara -First Among All
67.Purush- The Omnipotent Personality
68.Rakta- One who has Red Colored
Body
69.Rudrapriya- Beloved Of Lord Shiva
70.Sarvadevatman -Acceptor of All Celestial
Offerings
71.Sarvasiddhanta- Bestower of Skills and Wisdom
72.Sarvatman -Protector of The Universe
73.Shambhavi -The Son of Parvati
74.Shashivarnam -One who has a Moon like
Complexion
75.Shoorpakarna- Large-Eared Lord
76.Shuban -All Auspicious Lord
77.Shubhagunakanan- One who is The Master of All
Virtues
78.Shweta -One who is as Pure as the
White Color
79.Siddhidhata -Bestower of Success and
Accomplishments
80.Siddhipriya- Bestower of Wishes and Boons
81.Siddhivinayaka -Bestower of Success
82.Skandapurvaja- Elder Brother of Skanda
83.Sumukha -Auspicious Face
84.Sureshwaram- Lord of All Lords
85.Swaroop- Lover of Beauty
86.Tarun -Ageless
87.Uddanda- Nemesis of Evils and Vices
88.Umaputra The Son of Goddess Uma
89.Vakratunda Curved Trunk Lord
90.Varaganapati Bestower of Boons
91.Varaprada Granter of Wishes and Boons
92.Varadavinayaka Bestower of Success
93.Veeraganapati Heroic Lord
94.Vidyavaridhi God of Wisdom
95.Vighnahara Remover of Obstacles
96.Vignaharta Demolisher of Obstacles
97.Vighnaraja Lord of All Hindrances
98.Vighnarajendra Lord of All Obstacles
99.Vighnavinashanaya Destroyer of All Obstacles and
Impediments
100.Vigneshwara Lord of All Obstacles
101.Vikat Huge and Gigantic
102.Vinayaka Lord of All
103.Vishwamukha Master of The Universe
104.Vishwaraja King of The World
105.Yagnakaya Acceptor of All Sacred and
Sacrificial Offerings
106.Yashaskaram Bestower of Fame and Fortune
107.Yashvasin Beloved and Ever Popular Lord

                        AND
108.ganesha-the leader of all groups

wow... beautiful cutting arts.. really amazing.... must see























27 நட்சத்திரங்களுக்கும் உரிய பைரவர் திருநாமம் மற்றும் பைரவர் ஸ்தலங்கள்

வ. எண்நட்சத்திரங்கள்பைரவர்அருள்தரும் தலம்1.அசுவினிஞானபைரவர்பேரூர்2.பரணிமகாபைரவர்பெரிச்சியூர்3.கார்த்திகைஅண்ணாமலை பைரவர்திருவண்ணாமலை4.ரோகிணிபிரம்ம சிரகண்டீஸ்வரர்திருக்கண்டியூர்5.மிருகசிரிஷம்க்ஷேத்திரபாலர்க்ஷேத்ரபாலபுரம்6.திருவாதிரைவடுக பைரவர்வடுகூர்7.புனர்பூசம்விஜய பைரவர்பழனி8.பூசம்ஆஸின பைரவர்ஸ்ரீவாஞ்சியம்9.ஆயில்யம்பாதாள பைரவர்காளஹஸ்தி10.மகம்நர்த்தன பைரவர்வேலூர்11.பூரம்பைரவர்பட்டீஸ்வரம்12.உத்திரம்ஜடாமண்டல பைரவர்சேரன்மகாதேவி13.அஸ்தம்யோகாசன பைரவர்திருப்பத்தூர்14.சித்திரைசக்கரபைரவர்தர்மபுரி15.சுவாதிஜடாமுனி பைரவர்பொற்பனைக்கோட்டை16.விசாகம்கோட்டை பைரவர்திருமயம்17.அனுஷம்சொர்ண பைரவர்சிதம்பரம்18.கேட்டைகதாயுத பைரவர்சூரக்குடி
டி.வயிரவன்பட்டி திருவாடுதுறை, தபசுமலை19.மூலம்சட்டைநாதர்சீர்காழி20.பூராடம்வீரபைரவர்அவிநாசி, ஒழுகமங்கலம்21.உத்திராடம்முத்தலைவேல் வடுகர்கரூர்22.அவிட்டம்பலிபீடமூர்த்திசீர்காழி, ஆறகழூர்
(அஷ்டபைரவ பலிபீடம்)23.திருவோணம்மார்த்தாண்ட பைரவர்வயிரவன் பட்டி24.சதயம்சர்ப்ப பைரவர்சங்கரன்கோவில்25.பூரட்டாதிஅஷ்டபுஜபைரவர்கொக்கரையான்பேட்டை, தஞ்சாவூர்26.உத்திரட்டாதிவெண்கலஓசை பைரவர்சேஞ்ஞலூர்27.ரேவதிசம்ஹார பைரவர்தாத்தையாங்கார்பேட்டை