Tuesday 29 November 2011

தியானம் செய்வது எப்படி? தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?




                            தியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலை படுத்தும் நிலையே தியானமாகும். தியானம் இப்படி தான் செய்யவேண்டும் என்ற எந்த வரைமுறையும் கிடையாது பலபேர் பலமுறையில் சொல்வார்கள். ஆனால் அமைதியான சூழலில் (அதிகாலை உகந்தது) இரு கால்களையும் மடக்கி உட்கார்ந்து இரு கண்களையும் மூடிய நிலையில் அமைதியாக நம்முடைய மனம் அலைபாய்வதை நிறுத்தி ஒருநிலைப்படுத்தி உட்கார்ந்து இருப்பதே தியானம் என அழைக்கப்படுகிறது. இந்த தியானம் செய்வதனால் மனிதனுக்கு பல்வேறு நன்மைகள் உள்ளது. அதில் சில குறிப்பிட்ட நன்மைகளை கீழே கொடுத்துள்ளேன்.
  •  தியானத்தின் பலன்கள்:

    Ø  ஆக்சிஜன் உபயோகத்தை கட்டுக்குள் வைக்கிறது.
    Ø  இதய துடிப்பு வேகமாக இருந்தால் அதை கட்டு படுத்துகிறது.
    Ø  உயர் ரத்த அழுத்த பிரச்சினையை குறைக்கிறது.
    Ø  உங்கள் மனதை பரப்பரப்பில் இருந்து நிம்மதி அடைய செய்கிறது.
    Ø  நம்முடைய உடல் பகுதிகள் சீராக இயங்க உதவுகிறது.
    Ø  உடல் எடையை குறைக்கலாம்.
    Ø  உடலிற்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியை கொடுக்கும்.
    Ø  உடல் சக்தி வீணாவதை தடுக்கும்.
    Ø  தன்னம்பிக்கையை ஏற்ப்படுத்தும்.
    Ø  மூளை செயல்பாட்டை அதிகரிக்கும்.
    Ø  ஞாபக சக்தி அதிகரிக்கும்.
    Ø  தேவையில்லாமல் கோபப்படுவதை குறைக்கும்.
    Ø  மாணவர்களின் படிக்கும் சக்தி அதிகரிக்கும்.
    Ø  பேராசையை தவிர்க்கும்.
    Ø  உடலின் சக்தி,வேகம் அதிகரிக்கும்.
    Ø  கண்பார்வை அதிகரிக்கும்.
    Ø  அமைதியான மன நிலையை கொடுக்கும்.
    Ø  மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும்.
    Ø  முடிவு எடுக்கும் திறனை அதிகபடுத்தும்.
    Ø  மற்றவர்களிடம் இருந்து உங்களின் நிலையை அதிகரிக்கும்.
    Ø  போதை பொருளுக்கு அடிமையாகி இருந்தால் மீண்டு வர துணை புரியும்.
    Ø  ஓயாமல் எதையாவது யோசித்து கொண்டிருப்பதை தடுத்து மனதை ஒருநிலை படுத்தும்.
    Ø  சுவாச பிரச்சினைகளை தீர்க்கும்.
    Ø  புகை பழக்கத்தில் இருந்து மீள முடியும்.
    Ø  எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க உதவும்.
    Ø  லட்சியங்களை எளிதில் அடைய உதவும்.
    Ø  ஒரு தகவலை உள்வாங்கும் திறனை அதிகரிக்கும்.
    Ø  எந்த விஷயத்தையும் பெரிது படுத்தாமல் மன்னிக்க மனதை தயார் செய்யும்.
    Ø  நீங்கள் கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தால் தங்களுக்கும் இறைவனுக்கும் இடையே இனம் புரியாத ஆழமான உணர்வை உருவாக்கும்.
    Ø  நண்பர்கள் வட்டம் பெருகும்.
    Ø  தக்க சமயத்தில் தகுந்த முடிவை எடுக்கும் திறனை அதிகர்க்கும்.
    Ø  சமூகத்தில் தங்களின் நிலை உயரும்.
    Ø  கிடைத்தை வைத்து சந்தோசப்படும் அறிவை கற்று கொடுக்கும்.
    Ø  மன அழுத்தம், மனநோய் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட உதவி புரியும்.
    Ø  சமூக அக்கறை அதிகரிக்கும்.
    Ø  எதுக்காவும் யாரிடமும் கோபப்படுவதை தவிர்க்கும்.
    Ø  தூக்கம் வராமல் கஷ்டப்படுபவர்கள், படுத்த உடனே தூக்கம் நன்றாக வரும்.
    Ø  தூக்கத்தில், கண்ட கண்ட கனவுகள் வருவதை தவிர்த்து  நிம்மதியாக தூங்க முடியும்.
    Ø  மருத்துவமனைக்கு செல்லும் தேவையை குறைக்கும்.
    Ø  மருந்து மாத்திரைகளிடம் இருந்து உங்களை விடுவிக்கும்.
    Ø  மாணவர்கள் பாடங்கள் கவனிக்கும் திறனை அதிகர்க்கும்.
    Ø  தற்காப்பை உருவாக்கும்.
    Ø  வாழ்க்கையின் மேடு,பள்ளங்களை பக்குவமாக கையாள மனதை தயார்படுத்தும்.
    Ø  வயதிற்கேற்ற மன முதிர்வை உருவாக்கும்.
    Ø  இசையில் நாட்டமுள்ளவர்களுக்கு கலைத்திறனை அதிகரிக்கும்.
    Ø  ரத்த சுத்திகரிப்பை அதிகரிக்கும்.
    Ø  நீங்கள் மறந்துவிட்ட சில முக்கிய நிகழ்வுகளை ஞாபகபடுத்தும்.
    Ø  உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ்களை நீக்கும்.
    Ø  உடலில் உள்ள கொழுப்பு சக்தியை குறைக்க உதவும்.
    Ø  இதய நோய்களை கட்டுபடுத்தும்.
    Ø  உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாட்டை சீர்படுத்தும்.
    Ø  வியர்வை அதிகம் வெளியேறுவதை சீர்படுத்தும்.
    Ø  தலைவலி பிரச்சினை உள்ளவர்கள் அதற்க்கு தீர்வு காணலாம்.
    Ø  ஆஸ்மா நோயிலிருந்து பூரண குணமடையலாம்.
    Ø  தீய பழக்கங்களை ஒழிக்கும்.
    Ø  நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
    Ø  கற்பனை திறன் அதிகரிக்கும்.
    Ø  மற்றவர்கள் கூறும் அறிவுரையை தட்டி கழிக்காமல் பொறுமையோடு கேட்டு அதன்படி நடக்கும் மனநிலையை உருவாக்கும்.
    Ø  உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும்.
    Ø  உங்களின் அறிவுத்திறன் வளரும் விகிதம் அதிகமாகும்.
    Ø  பெரியவர்களை மதித்து நடக்கும் உயரிய மனம் உருவாகும்.
    Ø  உங்களுக்கு இருக்கும் கடமைகளை உணர செய்யும்.
    Ø  கடமைகளில் வெற்றியும் பெறச்செய்யும்.

    வாழ்க வளமுடன் 

Monday 28 November 2011

இங்கே இருக்கிறது வெற்றி......


முயன்று கொண்டே இருங்கள்...
முயற்சி என்பது உயிரோட்டம்;
முயன்றால் வாழ்க்கை பூந்தோட்டம்;
காயங்கள் படலாம், கலங்காதே;
உளிபட்டால், கல்லும் சிலைதானே......


மூச்சு விடுபவன் எல்லாம் மனிதனல்ல, முயற்சி செய்பவனே மனிதன். உண்பதும் உறங்கவதும் மட்டுமல்ல வாழ்க்கை, உழைத்துக் கொண்டும் உயர்ந்து கொண்டும் இருப்பதுதான் வாழ்க்கை. வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற முயன்று கொண்டே இருங்கள். 


சோதனைகள் ஏதும் இல்லாமல் கிடைக்கும் வெற்றியில் ருசியிருக்காது. பிரச்சனைகளும், சோதனைகளும் தன் நமக்குள் உள்ள சக்தியை வெளிக்கொண்டு வருகின்றன. 


சாதாரண நிலையில் பிறந்து, தனது வாழ்க்கையை தொடங்கி, பெரிய சாதனைகள் செய்து, இந்த உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் ஏராளம்.  அவர்கள் வாழ்க்கை வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள்தான், கீழே வருவன:

  1. மற்றவர்களால் முடியாது என நினைக்கும் காரியத்தை முடித்துக் காட்ட வேண்டும் என்ற மன உறுதி வேண்டும்.
  2. முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை எப்போதும் பயன்படுத்திக்கொள்ளும் மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும். 
  3. தான் சார்ந்துள்ள துறை சார்ந்த தகவல்களை அவற்றை ஒவ்வொரு முயற்சியிலும் பயன்படுத்த வேண்டும்.
  4. சம்பளத்துக்காக வேலை செய்கிறேன் என்ற மனப்பான்மையை விடுத்து சாதனைக்காக வேலை செய்கிறேன் என்ற லட்சிய வேட்கையோடு பணியாற்றும் பண்பு வேண்டும். 
  5. நியாயமான வழியில்தான் முன்னேற  வேண்டும் என்ற ஒழுக்க நெறியும், அப்படிப்பட்ட ஒழுக்க நெறிகொண்டு வெல்லும்போது தான் மன மகிழ்ச்சியும் நிறைவும் இருக்கிறது என்ற கொள்கைப் பிடிப்பு வேண்டும். 
  6. எந்த சூழ்நிலையிலும் யாருக்காகவும் தான் கொண்டிருக்கும் தன சார்ந்த மதிப்பீடுகளை விட்டுவிடாத மனவுறுதி வேண்டும். 
  7. தனது உழைப்பை முழுமையாக நம்புவதோடு, சுற்றியிருப்போரின் நன்மதிப்பை பெரும் விதத்திலான அணுகுமுறையைக் கையாள வேண்டும்

இத்தகைய பண்புகளை உடையவராக நீங்கள் மாறினால், முன்னேற்ற ஏணியில் தொடர்ந்து சென்றுகொண்டேயிருக்கலாம். 
முயலுங்கள் முன்னேறுங்கள்.....

முயற்சியில்தான் வளர்ச்சி முளைக்கிறது. பயிற்சியில் தான் வாழ்க்கை செழிக்கிறது.  

Sunday 27 November 2011

பூணூல் அணிவதன் மகத்துவம் ...........


கல்லூரியில் படிக்கிறோம். படித்து முடித்தவுடன் ஒரு சான்றிதழ் தரப்படுகிறது.

காவலர் பயிற்சியை முடித்தவனுக்கு போலிஸ்காரனுக்குரிய அடையாள சின்னங்கள் தரப்படுகின்றன.

ஒரு சான்றிதழ் போல அடையாள சின்னம் போல காட்டப்படுவது தான் பூணூல் ஆகும்.

இந்த பூணூல் அடையாளம் எதற்கு தேவைப்படுகிறது.

மந்திரங்களில் ராஜ மந்திரம் என்று கருதப்படுவது காயத்ரி மந்திரமாகும்.

நியமனப்படி காயத்ரியை ஜபிக்கும் ஒருவன் ஞானத்திலும், தேஜஸ்திலும் சிறந்தவனாக இருக்கிறான்.

ஒரு தாய் தனது குழந்தையை காப்பது போல காயத்ரி மந்திரம் மனித மனதை சிதற விடாமல் காக்கிறது.

இந்த மந்திரத்தை சொல்லும் தகுதியை ஒருவன் அடைந்து விட்டான் என அடையாளப்படுத்துவதே பூணூலாகும்.

பூணூல் அணிந்த பின் அதை அணிவோர் புதிய ஒரு பிறப்பு எய்துவதாக இச்சடங்குக்குப் பொருள் கூறப்படுகிறது. முதன்முதல் பூணூல் அணியும் சடங்கை உபநயனம் என்று கூறுவர். பூணூல் அணிந்தவன் காயத்திரி என்ற மந்திர அறிவுரை பெற்றுப் புதுப்பார்வை பெறுகிறான் என்பது இதன் பொருள். இவ்வாறு, முற்காலத்தில் குடும்பத் தலைமை, சமூகத் தலைமையைக் குறிக்க அணிவிக்ப்பட்ட பூணூல் பின்னர் மெய்யியல் தெளிவு பெற்றோரைக் குறிப்பதாக மாறிப் பின்னர் ஒரு குறிப்பிட்ட சாதியாரின் தனிவுடைமையாகிய கதையாகி விட்டதாம். அப்படியானால், பூணூல் அணிவது தமிழரின் மரபா?.தமிழ்நாட்டில் இந்தச் உபநயனச் சடங்கைத் தீக்கை (தீட்சை) பெறுதல் என்றும் அழைப்பார்களாம். அதாவது ஒரு ஆசானிடம் அறிவுரை பெற்று இறைப்பணி புரோகிதம் அல்லது ஆசிரியப்பணி செய்ய ஏற்புப் பெறுவது என்பதே இதன் பொருள் அதாவது ஒருவகையான உரிமத்தின் அடையாளம்.

இன்று பூணூல் அணிவது, பெரும்பாலும் பிராமணர்களாக இருந்தாலும், பொற்கொல்லர்கள்(தட்டார்கள்) பூணூல் அணிந்திருப்பதை ஓர் உரிமையாகவும் சடங்காகவும் வைத்துள்ளனர்.

 பூணூல் மூன்று புரி நூல்கள் இருக்கும். இவை சிவன், விஷ்னு, பிரம்மாவையும், சக்தி, லஷ்மி, சரஸ்வதியையும் நினைவூட்டுவதாகும்.

அது மட்டுமல்லாது வேதம் சொல்லுகின்ற மனித குணங்களான சத்வ, ராஜஷ, தாமஸ ஆகிய மூன்று மனித குணங்களையும் ஞாபகப்படுத்துகிறது.

முக்காலத்தையும் விழிப்பு, கனவு, அமைதி ஆகிய மூன்று அவஸ்தைகளையும் இது காட்டுகிறது எனலாம்.

மேலும் மனிதன் அனுபவித்தே ஆக வேண்டிய இகலோக, பரலோக, அகலோக வாழ்க்கையையும் காட்டுகிறது.

மூன்று நூல்களையும் இணைந்து முடிவில் போடுகின்ற முடிச்சிக்கு பிரம்ம முடிச்சி என்று பெயர்.

மனித உடலில் ஓடும் இடகலை, பின்கலை, சூட்சம நாடிகள் குண்டலினி சக்தியின் இருந்து துவங்குவதையும் பிரம்ம முடிச்சி உருவகமாக காட்டுகிறது.

வேதங்கள் பூணூலை பற்றி ஒன்றும் பேசவில்லை என்றாலும் சில வேத பிரம்மாணங்கள் பூணூலுக்கு ஏக்னோ பவித்ரம் என்று பெயர் கொடுத்து பேசுகின்றன.

சூத்ர, வைசிக, சத்ரிய, பிராமண ஆகிய நான்கு வருணத்தாரும் பூணூல் அணிய வேண்டும் என இந்த பிரம்மானங்கள் வலியுறுத்துகின்றன.

தொழிலையும் சாதியையும் பிறப்பின் அடிப்படையில் கொண்டு வந்த பிறகே சகல சாதியினரும் பூணூல் அணியும் பழக்கம் நின்று போய் விட்டது.

பழைய ஆரோக்கியமான சமூக நிலையை உருவாக்க விரும்பிய பாரதியார் தாழ்த்தப்பட்டோருக்கும் பூணூல் அணிவிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார்.

இன்றைய சமூக சீர்திருத்த காரர்கள் பூணூல் அறுப்பு போராட்டத்தை கைவிட்டு விட்டு எல்லோருக்கும் காயத்ரி மந்திரம் உபதேசம் செய்து பூணூல் அணிவிப்பது நல்ல விளைவை ஏற்படுத்தும்.

இன்றும் இலங்கையில், தாய் தந்தையரின் சிதைக்குக் கொள்ளி வைக்கும் போதும், ஈமச் சடங்குகளைச் செய்யும் போதும், மாணிக்கவாசகரின் திருப்பொற்சுண்ணத்தைப் பாடிச் சுண்ணமிடித்து , சைவமுறைப்படி ஈமக்கிரியைகள் செய்யும் போது, பூணூல் அணிவது வழக்கத்திலுள்ளது.

ஈழத்தில், பெரும்பாலான இந்துக்கள் தீட்சை பெறுவார்கள், தீட்சை பெறும் சடங்கை, சிறு வயதில் பாடசாலைகளிலேயே நடத்துவார்கள். ஈழத்தில் தீட்சை பெறுபவர், தான் தீட்சைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரும், தீட்சைபெற்றபின் ஒருமாதமும் சைவ உணவுகளை உட்கொள்ள வேண்டும். (அசைவ உணவுகளை உண்பவராக இருந்தால்). அதன்பின் தீட்சைபெறும் நாளன்று நீராடியபின் கோவிலுக்குச் சென்று, தீட்சைக்கான சடங்குகளைச் செய்துமுடித்த பின் கோயில் குருக்கள் பல மந்திரங்களைக் காதில் ஒதுவார் அதில் முக்கியமானது ஓம் சிவாயநமசில மந்திரங்களை தீட்சை பெறாத இன்னொரு இந்துவுக்குக் கூடத் திருப்பிச் சொல்லக் கூடாதென்பது நம்பிக்கை.



                              ஈழத்தில் பூணூல் அணியும் சடங்கு ( இவர்கள் யாரும் பிராமணர்கள் அல்ல )

பூணூலை பற்றி இன்னொரு முக்கியமான விஷயத்தை இங்கு சொல்ல வேண்டும்.

இயற்கை உபாதைகள் சரிவராதவர்கள் காதுகளில் பூணூலை சற்று அழுத்தமாக சுற்றிக் கொண்டால் மிக சுலபமாக பிரச்சனை தீரும்.


இது அனுபவ உண்மை மட்டுமல்ல. மருத்துவ உண்மையாகும்.

Thursday 24 November 2011

போகும்போது என்னாத்த எடுத்துட்டு போகப்போறோம்?




                             எம்மோடு என்ன வரும்? இந்த உடல் வருமா? உடல் சார்ந்த உறவு வருமா? நாம் படித்த படிப்பு வருமா? பெற்ற பட்டம் வருமா? பதவி வருமா? நாம் சேர்த்த பொருள் வருமா? அனுபவிக்கும் அதிகாரம் தான்  கூட வருமா? உண்ணாமலும், உறங்காமலும், உழைத்து உழைத்து ஓடாகிப்போகிறோமே! கூடவே வரப்போவதற்காகவும் கொஞ்சம் உழைத்தாலென்ன? இதனைப் பற்றிய சிந்தனை செயல் வடிவம் பெற்றிருந்தால் நல்லது தான். செய்யவில்லையா? இப்போது கூட  செய்ய முடியும். இங்கு வந்த போது கொண்டு வந்ததும் உண்டு. கடைசியில் கொண்டு போவதும் உறுதி.

                           மனிதன் தனது சொந்தம் என்று கொண்டாடுவது என்ன என்று பார்ப்போம். அதிலே முதலாவதாக மிக நெருக்கமாக உள்ளது இந்த உடல். இது பிறப்பு முதல் இறப்பு வரை கூடவே இருக்கிறது. இரண்டாவது சசீர சொந்த பந்தம். மூன்றாவது செல்வம். நான்காவது படிப்பு, பட்டம், பதவி, மதிப்பு, மரியாதை ஆகியன. இவை எதுவுமே கூட வரப்போவதில்லை என்பது நமக்குத் தெரிந்ததுதான். என்றாலும் இவற்றை எவ்வளவு தூரம் இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறோம்.

                            இந்த உடலைப் பார்த்தோமேயானால் இதற்குக் கடைசியில் என்ன விலை மதிப்பிருக்கும்? எது வரையிலும் உயி்ர் உடலில் இருக்கிறதோ, அதுவரை உடலுக்கு மதிப்பு இருக்கும். ஆனால் உயிர் பிரிந்ததும் இதைப் பிணம் என்றுதான் சொல்வோம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாகச் செய்ய வேண்டிய கிரியைகளைச் செய்து முடிக்கின்றோம். என்றாலும் இன்று உடல் அலங்காரத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம். இளமையாக வைத்துக் கொள்ள வேண்டும், அழகாக இருக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறையுடையவர்களாய் இருக்கிறோம். உடலுக்கு சோப்பு, கிறீம், பவுடர், சாம்பு, எண்ணெய், சென்ரு என எவ்வளவோ செலவிடவும் செய்கிறோம். விலையுயர்ந்த ஆடை, அணிகலன்களை அணிவிக்கிறோம். ஆனால் ஆத்மா பிரிந்து விட்டால் உடலில் எவ்வளவு வாசனைத் திரவியங்களைத் தெளித்தாலும். துர்நாற்றத்தைத் தடுக்க முடியவில்லை.

                          இன்றைய கலியுக வாழ்க்கைப் பயணத்தில் எப்போது என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. வெகு சமீபகாலம் வரையிலும் கூட இன்று நடப்பது போல விபத்துக்கள் நடந்ததில்லை. விபத்துகள் நடக்காத நாளே இல்லை என்ற அளவுக்கு விபத்துக்கள் தற்காலத்தில் நடப்பதைப் பார்க்கிறோம். இதற்கு முன் எப்போதாவது அதிசயமாகத்தான் விபத்துகள் நடப்பது உண்டு. இதைக் கேள்வியுற்று அதிர்ச்சியுற்றதும் உண்டு. ஆனால் இன்று மனிதன் அதிர்ச்சியில் இருந்து விடுபட்டு விட்டான் என்று சொல்ல முடியும். அந்த அளவுக்கு விபத்துக்கள் நடப்பதால் அது பழகிப் போய்விட்டது. ஆதலால் வாழ்கையில் கொஞ்ச நஞ்சமிருந்த விசுவாசமும் போய்விட்டது. உடலைப் பற்றிக் கவலைப்பட்டு என்ன பலன்? சுவாசிப்பது, பருகுவது, உண்பது எல்லாமே கலப்படப் பொருள்தானே. பூச்சி கொல்லி மருந்து மூலமாக எல்லா உணவுப் பொருள்களிலும் விஷம் இரண்டறக் கலந்து விட்டது. இது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அனுமதிக்குமா? உண்ணும் உணவிலும் ஊட்டமில்லை. செல்கின்ற பயணத்திலும் உத்தரவாதம் இல்லை. இளமையும் நிலையாக இல்லை. இந்த நிலையில் ஒவ்வொரு வினாடியும் உத்தரவாதமற்ற வினாடிகளாகவே போய்க்கொண்டிருப்பது கண்கூடு. எந்த ஒரு வினாடியிலாவது நாம் செல்லத்தான் வேண்டும் என்பது உத்தரவாதம் உள்ளதாக இருக்கும் போது, செல்லும் போது நாம் உடன் கொண்டு செல்ல என்ன சேமித்து வைத்திருக்கின்றோம்? என்பதைச் சிந்திக்க வேண்டும் அல்லவா?

                               சரீர சொந்த பந்தத்தை எடுத்துக் கொண்டால் குடும்பத்தில் குழந்தை பிறக்கிறது. அதை எவ்வளவோ அக்கறையுடன் அன்பு செலுத்திக் கண்ணுங் கருத்துமாக வளர்க்கின்றோம். நோய் வந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்கின்றோம். படிக்க வைத்துப் பெரிய நிலையில் வைக்கிறோம். இப்படி எல்லாக் குடும்பங்களிலும் நடப்பதுதான்.                     ஆனால் குழந்தை கடைசிவரை கூடவே இருக்கும் என்றோ அல்லது குழந்தையுடன் மற்றவர்கள் இருப்பார்கள் என்றோ உறுதி சொல்ல முடியுமா? அவரவர் கணக்குப்படி என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அப்போது சொந்த பந்தம் கூடவருமோ? யாருமே வரப்போவதில்லை என்பது சர்வ நிச்சயம். இதனைக் கவிஞர் கண்ணதாசனும் "வீடுவரை உறவு, வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசிவரை யாரோ?" என்று கூறியிருக்கிறார். எனவே இதைப் பற்றிச் சிந்திக்காமல் விட்டுவிட முடியுமா?

                                            இந்தக் காலத்தில் அதிகமாகப் படித்தவர்கள் அநேகராகி விட்டார்கள். எத்தைனையோ ஆண்டுகள் கஷ்டப்பட்டுப் படித்துப் பட்டம் பெறுகிறார்கள். பதவியும் கிடைக்கிறது. வருமானம் வருகிறது. அந்தஸ்தும் கூடுகிறது. எனினும் இந்த உடலில் உயிர் இருக்கும் வரைதான், இந்தப் பட்டம், பதவி எல்லாமே. பிறகு என்னொரு பிறவி, இன்னொரு படிப்பு, பதவி இதே தொடர்கதைதான். இதைப் பற்றிச் சிந்திக்காமல் விட்டுவிட முடியுமா?

                                      வாழ்க்கை நிர்வாகத்திற்குப் பணம் அவசியம். இதற்காக இரவு பகலாக உழைக்கிறோம். பணம் சேர்த்தோம். புது வீடு கட்டினோம். வங்கியில் பணம் சேர்த்தோம். பல ஏக்கர் நிலத்தை வாங்கினோம். தொடர்ந்தும் உழைத்துக் கொண்டே இருக்கிறோம். உடலில் பாதிப்பு உண்டாகலாம். ஏதாவதொரு விஷயத்தில் மனக் கஷ்டமும் வரலாம். என்றாலும் பணம் சேர்க்கும் முயற்சியை விட்டுவிட முடிவதில்லை. இத்தனைக்கும் இடையே ஒருநாள் யோசிக்கவும் செய்தோம். நன்றாகத் தெரியவும் செய்கிறது. இவை எல்லாம் இங்கேயே இருந்துவிடும் எம்மோடு வராது. அப்படியானால் என்ன செய்யலாம்?

                                இந்தக் காலத்தில் மதிப்பு, மரியாதை வேண்டும் என்ற ஆவல் அதிகமாக உள்ளது. இதற்காக எப்படியாவது எத்தனை தடைகள், குறுக்கீடுகள் வந்தாலும்; அதிகாரம், அந்தஸ்தைப் பெற்றுவிடவேண்டும் என்று வேண்டிய முயற்சிகளை மேற்கொள்கிறோம். இப்படிச் சமூகத்தில் அந்தஸ்தும் கிடைத்து விட்டது. எல்லோரும் மதிக்கிறார்கள். நல்லதுதான். ஆனால் கடைசியில் இவை எம்முடன் வருமா? இதுவும் வராதென்றால் வேறென்ன வரும்?

                                                      எல்லோரும் அறிந்திருக்கிறோம்; இங்கு வரும் போது தனியாகத்தான் வந்தோம், அப்படித்தான் போவோமென்று. ஆனால் மனிதன் வாழும் காலத்தில் மனம், சொல், செயலில் களங்கமின்றிக் கடமையைச் செய்திருந்தால்; தனக்கும் மனநிறைவு இருக்கும், மற்றவருடைய அன்புக்குப் பாத்திரமாகி இருப்போம். எல்லோரிடமும் அன்புடனும், அடக்கத்துடனும் நடந்து கொண்டால் அனைவரது ஆசிகளும் கிடைத்திருக்கும். உண்மையில் ஒவ்வொரு செயலும், சுபாவமும், அணுகுமுறையும் தனக்கும், பிறருக்கும் திருப்தி அளிக்கக் கூடியதாக இருந்திருந்தால், இதன் காரணமாக நாம் பெறுகின்ற ஆசிகள் எம்மோடு கூட வரும். இவ்வாறு எல்லோரிடமிருந்தும் பெறுகின்ற நல்ல ஆசிகளே உண்மையான பொக்கிஷம். மற்றவர் உள்ளத்தில் நமக்காக உண்டாகும் நல்லெண்ணங்களே உண்மையான பட்டங்கள் ஆகும். உடல் மூலமாக நாம் என்ன தொண்டு செய்தோமோ, அந்த வருமானம் கூட வரும். ஆனால் பொருள் மூலமாக ஆன்மீக முன்னேற்றத்திற்காக, உலக நன்மையின் பொருட்டு பொது நலத் தொண்டு செய்தால், அது கூட வரும். ஸ்தூலமாகக் கிடைக்கின்ற பட்டம், பதவி, மதிப்பு, மரியாதை, பொருள், பண்டம், எதுவுமே கூட வராது. ஆனால் இதன் மூலமாக மக்களுக்கு நல்லது செய்திருந்தால், இதன் காரணமாக அவர்களிடம் உண்டாகும் மனப்பூர்வமான ஆசிகள்தான் பட்டங்களாக கூட வரும்.

                                              எனவே நாம் போகும் போது கொண்டு போகத்தான் வேண்டும் என்பது நிச்சயமாக இருக்கும் போது நாம் நல்லதைச் சேமிப்பதும் அவசியமல்லவா?

                                                    வாழ்க வளமுடன்

வேலவனின் வேறு பெயர்களும் அதன் விளக்கமும்!




1. ஆறுமுகம்: ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது.

2. குகன்: குறிஞ்சி நிலத் தெய்வம், மலைக் குகைகளில் கோயில் கொண்டதால் குகன்.

3. குமரன்: மிக உயர்ந்தவன், இளமையை எப்போதும் உடைவன், பிரம்மச்சாரி ஆனவன்.

4. முருகன்: முருகு அழகு என்று பொருள், எனவே முருகன் ஒப்புமையற்ற பேரழகன்.

5. குருபரன் : கு - அஞ்ஞான இருள், ரு - நீக்குபவர், ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றுபவன் குரு சிவனுக்கும், அகத்தியருக்கும், அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன் குருநாதன்.

6. காங்கேயன்: கங்கையின் மைந்தன்.

7. கார்த்திகேயன்: கார்த்திகைப் பெண்களால் வளர்ந்தவன்.

8. கந்தன் : கந்து - யானை கட்டும் தறி. கந்தன் ஆன்மாக்களுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகைவர் வலிமையை அழிப்பவன் ஸ்கந்தன். தோள் வலிமை மிக்கவன். ஆறு திருமேனியும் ஒன்றானவன்.

9. கடம்பன் : கடம்ப மலர் மாலை அணிந்தவன்.

10. சரவணபவன் : சரம் - நாணல், வனம் - காடு, பவன் - தோன்றியவன், நாணல் மிக்க தண்ணீர் உடைய காட்டில் தோன்றியவன்.

11. ஸ்வாமி: ஸ்வம் - சொத்து, எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன். சுவாமி என்ற பெயர் முருகனுக்கு மட்டுமே உரியது. சுவாமி உள்ள மலை சுவாமி மலை.

12. சுரேஷன் : தேவர் தலைவன் சுரேசன்.

13. செவ்வேள் : செந்நிறமுடையவன், ஞானச் செம்மை உடையவன்.

14. சேந்தன் : செந்தழல் பிழம்பாய் இருப்பவன்.

15. சேயோன் : சேய் - குழந்தை, குழந்தை வடிவானவன்.

16. விசாகன் : விசாக நட்சத்திரத்தில் ஒளியாய் உதித்தவன்.

17. வேலவன், வேலன் : வெல்லும் வேல் உடையவன். அறிவாக, ஞான வடிவாக விளங்கும் வேல், கூர்மை, அகலம், ஆழம் என்னும் மூன்றும் உடையது.

18. முத்தையன்: பிறப்பிலேயே முத்து ஒளியுடையது. மற்ற மணிகள் பட்டை தீட்டினால் தான் ஒளிரும். எனவே இயல்பாகவே ஒளிர்பவன் முத்தையன்.

19. சோமாஸ்கந்தன் : ச - உமா - ஸ்கந்தன்: சிவன் உமை முருகன்; சத்து - சிவம், சித்து - உமை, ஆனந்தம் - கந்தன், முருகன் ஆனந்த வடிவானவன்.

20. சுப்ரமணியன் : சு - மேலான, பிரம்மம் -பெரிய பொருளிலிருந்து, நியம் தோன்றி ஒளிர்வது. மேலான பெரிய பிரம்மத்தில் இருந்து தோன்றி ஒளிர்பவன்.

21. வள்ளற்பெருமான் : முருகன், மண்ணுலகில் அவதரித்த வள்ளி இச்சா சக்தி மூலம் இக நலன்களையும், விண்ணுலக மங்கை தெய்வானை கிரியா சக்தி மூலம் பரலோக நலன்களையும், வேலின் மூலம் ஞானசக்தியையும் ஆகிய மும்மை நலன்களையும், முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.

22. ஆறுபடை வீடுடையோன்: மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறாதாரங்களை ஆறுபடை வீடுகளாய் உடையவன்.

23. மயில்வாகனன் : மயில் - ஆணவம், யானை -கன்மம், ஆடு - மாயை இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்.

24. தமிழ்:  தமிழ் என்றால் முருகன். முருகன் என்றால் தமிழ். இரண்டையும் பிரிக்க முடியாத அளவிற்கு இணைந்தே இருக்கும். உதாரணமாக 12 உயிரெழுத்து என்பது முருகனின் 12 தோள்களை குறிக்கும். 18 மெய்யெழுத்து என்பது முருகனின் 18 கண்கள் (முருகன் சிவனது நெற்றிப் பொறியிலிருந்து தோன்றியவர் என்பதால், இவரது ஒவ்வொரு முகத்திலும் இவருக்கும் நெற்றிக்கண் உண்டு) 6 இன எழுத்து என்பது 6 முகங்களை குறிக்கும். ஃ என்ற ஆயுத எழுத்து வேலை குறிக்கும்.இந்த வேலை வணங்குவதையே வேலையாக கொண்டால் வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

பாம்பன் சுவாமிகள் விளக்கம்
ஓம் சரவண பவ - பரமாத்ம வடிவம் சித்திக்கும்.
ஐம் சரவணபவ - வாக்கு வன்மை சித்திக்கும்.
சௌசரவணபவ - உடல் வன்மை சிறக்கும்.
க்லீம் சரவணபவ - உலகம் தன் வயமாகும்.
ஸ்ரீம் சரவணபவ - செல்வம் சிறக்கும்.