Wednesday 31 August 2011

| Cricket-365

| Cricket-365

Monday 29 August 2011

வாங்க சார்... நாமளும் இலக்கு வைச்சு ஜெயிச்சு காட்டலாம்..!

 எழுமின், விழுமின் - குறி சாரும் வரை நில்லாது செல்மின் , என்று வீர முழக்கமிட்ட விவேகானந்தர் பிறந்த மண்ணில் தான் நாமும் பிறந்து இருக்கிறோம். ஆனால், நமக்கும் தான் எத்தனை குளறுபடி, குழப்பங்கள்...


 அர்ஜுனன் அம்பு எய்யும்போது , தூரத்தில் இருந்த மரத்திலே உட்கார்ந்து இருந்த கிளியோட கண்ணுதான் தெரிஞ்சதாம். அது , உண்மையோ , பொய்யோ தெரியலை.. ஆனா, சொல்லி குறி வைச்சு அடிக்கிற , ஜெயிக்கிற ஆளுங்க இன்னும் நம்ம கூட இருக்கிறாங்க தானே... 


நமக்கு ஏன் அது புரியவே , இல்லை கைவசப்படவே மாட்டேங்குது.. கீழே கொடுக்கப்பட்டுள கட்டுரையை படிச்சுப் பாருங்க.. பல உண்மைகளை உங்களுக்கு அது புலப்படுத்தலாம்...    
====================================================
ஒரு கால் டாக்சியில் ஏறுகிறீர்கள். டிரைவர் "எங்கே போக வேண்டும்?" என்று கேட்கிறார். நூறு மைல் தூரத்தில் உள்ள ஒரு இடத்தைச் சொல்கிறீர்கள். அது தான் நீங்கள் போக வேண்டிய முக்கியமான இடம். அதற்கு இப்போதுள்ள தெருவிலேயே நேராகப் போக வேண்டும் என்று வைத்துக் கொள்வோம்.

கார் மூன்று மைல் போனதும் உங்களுக்கு வலதுபக்கத் தெருவில் உள்ள வேறொரு இடத்திற்குப் போனால் என்ன என்று தோன்ற டிரைவரிடம் வலதுபக்கம் காரைத் திருப்பச் சொல்கிறீர்கள். அவரும் திருப்புகிறார். அந்தத் தெருவில் அந்த இடத்திற்குப் போக இன்னும் 20 மைல் பயணம் செய்ய வேண்டும். ஐந்து மைல் போனவுடன் ஒரு திருப்பத்தில் நீங்கள் பல காலமாக போக நினைத்திருந்த ஒரு கோயில் 12 மைல் தான் என்று எழுதி இருப்பதைப் பார்க்கிறீர்கள். இத்தனை தூரம் வந்த பின் அந்தக் கோயிலிற்குப் போனால் என்ன என்று உங்களுக்குத் தோன்றுகிறது. டிரைவரை அந்தத் தெருவில் திருப்பச் சொல்கிறீர்கள். டிரைவர் அந்தத் தெருவில் காரைத் திருப்புகிறார்.

கார் ஏழு மைல் போனவுடன் தெருவில் பழுது பார்க்கும் பணி நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறீர்கள். மாற்றுப் பாதையில் போகும்படி ஒரு பலகையில் எழுதியிருக்கிறது. அப்படிப் போனால் நீங்கள் போக நினைத்த கோயிலுக்கு 25 மைல் பயணம் செய்ய வேண்டி இருக்கும் என்று அறிந்த போது கோயிலுக்குப் போகும் எண்ணத்தைக் கை விடுகிறீர்கள். வண்டியைத் திருப்பச் சொல்கிறீர்கள். கார் வந்த வழியே திரும்புகிறது. வழியில் டீ சாப்பிட காரை நிறுத்தச் சொல்கிறீர்கள். டீக்கடையில் ஒருவர் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம் ஏழு மைல் தூரத்தில் இருப்பதாகச் சொல்கிறார். இவ்வளவு தூரம் வந்து விட்டு அங்கு போகாமல் இருப்பதா என்று தோன்ற காரை அவர் சொன்ன பாதையில் விடச் சொல்கிறீர்கள்..........

இப்படி நாள் முழுவதும் பல முறை தங்கள் பயணத்தை திசை திருப்பிக் கொண்டே இருந்தால் நாள் முழுவதும் பயணம் செய்து கொண்டு இருந்தாலும் நீங்கள் போக நினைத்திருந்த அந்த முக்கியமான இடத்திற்கு நீங்கள் போய்ச் சேர முடியுமா? எத்தனையோ முக்கியமில்லாத இடங்களுக்கு நீங்கள் போய்ப் பார்க்க முடிந்தாலும் நீங்கள் எங்கு போகக் கிளம்பினீர்களோ அந்த இடத்திற்கு தூரத்திலேயே அல்லவா
நீங்கள் இருந்து கொண்டிருக்கிறீர்கள்.

போக வேண்டிய முக்கியமான இடத்தை விட்டு பல வழிகளில் சுற்றி மற்ற இடங்களுக்குப் போவது முட்டாள் தனம் என்று சாதாரண அறிவு படைத்தவராலும் சொல்ல முடியும். ஆனால் இந்த முட்டாள்தனத்தை நம்மில் எத்தனை பேர் நம் வாழ்க்கைப் பயணத்தில் செய்து கொண்டிருக்கிறோம்.

உண்மையில் நம் வாழ்க்கைப் பயணமும் இந்த கார் பயணம் போலத்தான். ஒரு முக்கிய காரணத்திற்காக நாம் பிறந்திருக்கிறோம். அது தான் நாம் போய்ச் சேர வேண்டிய அந்த முக்கிய இடம். பிரபஞ்சமே அந்த கார் டிரைவர். நாம் எங்கு போக வேண்டும் என்று எப்படி டிரைவர் தீர்மானிக்க மாட்டாரோ பிரபஞ்சமும் நம் இலக்குகளைத் தீர்மானிப்பதில்லை. ஆனால் நம் விருப்பப்படி நம்மை அது கொண்டு செல்லக் காத்திருக்கிறது. 
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSLfK5wg-wPdqHajebtPrfZZP4MeLyVJbKXOfdhcpy4Us56DAJR
நம் விருப்பம் தெளிவாகவும் நமக்கு உண்மையிலேயே முக்கியமாகவும் இருக்கிற வரையில் நம் நடவடிக்கைகள் அதற்கு எதிர்மாறாக இருப்பதில்லை. எண்ணத்திலும், செயலிலும் தெளிவிருக்கிற போது நமது குறிக்கோளை எட்டுவது நமக்கு எளிதாகிறது. ஆனால் நம் விருப்பங்கள் அடிக்கடி மாறிக் கொண்டு இருந்தால், ஒன்றுக்கு ஒன்று முரணாக இருந்தால் வாழ்க்கையில் குழப்பமே அல்லவா மிஞ்சும்.

கார் பயணத்தில் மேலே குறிப்பிட்ட குழப்பங்கள் இருந்தால் பணமும் காலமும் மட்டுமே அந்த ஒரு நாள் விரயமாகும். ஆனால் அதுவே வாழ்க்கைப் பயணத்தில் குழப்பம் இருக்குமானால் வாழ்க்கையே விரயமாகிறது. இன்னொரு வாழ்க்கையும் சந்தர்ப்பமும் கிடைக்குமா என்பது சந்தேகமே.

எனவே நாம் ஒவ்வொருவரும் இது வரை பிரபஞ்சம் என்ற கார் டிரைவருக்கு எப்படியெல்லாம் போகக் கட்டளையிட்டு இருக்கிறோம் என்று எண்ணிப் பார்ப்பது நல்லது. நமக்கு உண்மையில் என்ன வேண்டும், எது முக்கியம் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறோமா? இல்லை முரண்பாடுகளால் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறோமா?

எனக்கு உடல் டிரிம் ஆக இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் நான் உடற்பயிற்சி செய்வதில் சோம்பலும், உடலுக்கு ஆகாத உணவுப் பதார்த்தங்கள் சாப்பிட ஆவலும் காட்டினால் அது மேலே குறிப்பிட்ட கார் பயணம் மாதிரி தான். முக்கியம் என்று நான் நினைப்பதாக நினைக்கும் ஒரு குறிக்கோளுக்கு எதிர்மாறாக நடவடிக்கைகள் செய்து என் குறிக்கோளுக்கு தொலைவிலேயே நான் நிற்கிறேன் என்று பொருள்.

கிரிக்கெட் சீசனில் பெரிய கிரிக்கெட் வீரராக ஆசை, சில நாட்கள் கழித்து பிரபல பாட்டுப் போட்டி ஒன்றைக் கண்டு சிறந்த பாடகனாக ஆசை, அடுத்த மாதம் இன்னொரு ஆசை என்று வேறு வேறு ஆசைகள் நம்மை ஆட்கொள்ள ஒவ்வொன்றிலும் சில காலம் பெரிய ஈடுப்பாட்டுடன் இருந்து இன்னொன்றிற்குத் தாவிக் கொண்டே இருந்தால் நாம் இதில் எதுவும் ஆகப்போவதில்லை என்பதே யதார்த்த உண்மை. ஏனென்றால் பிரபஞ்சத்திற்கு மாற்றி மாற்றி கட்டளை கொடுத்தபடி இருக்கிறோம்.

அதே போல ஒரு குறிக்கோள் மனதில் இருந்தாலும் அதற்காக எதுவும் செய்ய நாம் தயாராக இல்லாத போதும் எண்ணம் மூலமாக ஒரு கட்டளையும், செயல் மூலமாக நேர் எதிரான கட்டளையும் பிரபஞ்சத்திற்கு தந்து கொண்டு இருக்கிறோம் என்பது பொருள்.

நம்மில் எத்தனை பேர் எங்கு போக வேண்டும், என்ன ஆக வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம்?
பலரும் தெளிவாக இருப்பதாக சொல்லக்கூடும். ஆனால் தெளிவு என்பது எண்ணத்தோடு ஒருங்கிணைந்த செயல். அது நம்மிடம் உள்ளதா?

மனித வாழ்க்கை ஒரு நல்ல சந்தர்ப்பம். இதை நழுவ விட்டால் இன்னொரு சந்தர்ப்பம் நிச்சயமில்லை. நமக்குள்ளே தெளிவான லட்சியம் இருந்தால், அதை அடைய மன உறுதியும் இருந்து நம் செயல்களும் லட்சியத்தை நோக்கியே இருக்குமானால் விளைவைப் பற்றி நாம் கவலையே பட வேண்டாம். பிரபஞ்சம் நம்மை அதை நிச்சயமாக அடையச் செய்யும்.

பிரபஞ்சம் எல்லை இல்லாத சாத்தியக் கூறுகளோடு நமக்கு உதவக் காத்திருக்கிறது. நாம் தெளிவாக அதனிடம் கட்டளையிடத் தயாரா?


பிரச்சினையே நாம் நம் 'காரை' மற்ற 'காரோடு' ஒப்பிட்டுப் பார்ப்பதே. அந்த கார் அப்படி போகிறதே, நாமும் போவோம். அந்த வழி நமக்கேற்ற வழியா என்று பார்க்காமல் செய்வது தவறு

இஸ்லாமிற்கு மட்டுமல்ல ரம்ஜான்- not for islaamies only, -''RAMZAAN''



 



எந்தச்சூழலிலும் கோபம் வேண்டாம்: 


அப்துல்லா இறைவன் மீது அபார பக்தி கொண்டவர். ஒருநாள் இரவில், ஒரு பிச்சைக்காரர் வாசலில் நின்று, "ஐயா! பசிக்கிறது' என்றார். அப்துல்லா, அவரை உள்ளே அழைத்துச் சென்று, உணவு பரிமாறினார். பிச்சைக்காரர் சாப்பிட ஆரம்பித்தார். அப்துல்லா அவரிடம், ""பெரியவரே! தாங்கள் இந்த உணவைப் பெற்றவுடனேயே சாப்பிடத் துவங்கி விட்டீர்கள். இந்த உணவைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லிய பிறகல்லவா சாப்பிட தொடங்கியிருக்க வேண்டும்,'' என்றார். வந்தவர், ""ஐயா! இந்த உணவை அளித்தது நீர். இறைவன் அல்ல. உங்களுக்கு வேண்டுமானால் நான் நன்றி சொல்கிறேன்.


இறைவனுக்கு ஏன் நன்றி சொல்ல வேண்டும்?'' என்றதும், அப்துல்லாவுக்கு கோபம் வந்துவிட்டது. மீண்டும் மீண்டும் இறைவனால் தான் உணவு அவருக்குத் தரப்பட்டது என்று சொல்லியும் பெரியவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. போதாக்குறைக்கு, ""நீர் இறைவனைப் பார்த்திருக்
கிறீரா?'' என்று வேறு கேட்டுவிட்டார். அப்துல்லாவுக்கு கோபம் அதிகமானது. அந்தப் பெரியவரின் கையைப் பிடித்து, ""இறைவனுக்கு நன்றி சொல்லாத நீர் இதை சாப்பிட உரிமை இல்லாதவர்,'' என்று கூறவே, பெரியவர் கோபத்துடன் எழுந்து போய்விட்டார்.


அன்றிரவு இறைவன் அப்துல்லாவின் கனவில், ""அப்துல்லா! ஏன் அந்தப் பெரியவரை கடிந்து கொண்டீர்! அவர் என்னை இன்று மட்டும் மறுக்கவில்லை. கடந்த 70 ஆண்டுகளாக மறுத்து வருகிறார். அப்படியிருந்தும், பொறுமையாக நான் அவருக்கு உணவளித்து வந்துள்ளேன். ஆனால், நீர் ஒரே இரவில் பொறுமையிழந்து அவரை வெளியே அனுப்பி விட்டீரே,'' என்றார். அப்துல்லா திடுக்கிட்டு எழுந்தார். எல்லாம் வல்ல இறைவனின் கருணை மழையை எண்ணி வியந்தார். நம்மால் நன்மை பெற்றவர்கள் கூட, நம்முடன் கருத்து வேறுபாடு கொள்ளக்கூடும். அப்படிப் பட்ட சமயத்தில் கூட, நாம் அவர்களிடம் கோபப்படக்கூடாது என்பதே இன்றைய ரம்ஜான் சிந்தனை.


இருப்பதைக் கொண்டு வாழ்வோம்: 

வரவுக்கு மீறி செலவு செய்து, ஆடம்பரமாய் வாழும் நிலையால் பலரும் அவதிப்படுகின்றனர். ஒருமுறை, நபிகள்நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியர் ஒன்று கூடி, ""இறைத்தூதரே! தாங்கள் எங்களுக்குச் செலவுக்காக வழங்கும் பொருள் போதாது. இனிமேல், செலவுத் தொகையை அதிகமாக்கித் தர வேண்டும்,'' என்றனர்.


மனைவியரிடம் அண்ணலார் பேசவில்லை. வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள், பள்ளிவாசலிலேயே 28 நாட்கள் தங்கிவிட்டார்கள். ஒருநாள், இறைவனின் தூதுவரான ஜிப்ரீல் (அலை) அவர்கள், ஒரு வேத வசனத்துடன் இறங்கி வந்தார்கள்.""நபியே! உங்களுடைய மனைவிகளை நோக்கிக் கூறுங்கள். நீங்களெல்லாம் இந்த உலக வாழ்வையும் அதன் அலங்காரத்தையும் மட்டுமே விரும்புவோராயின், வாருங்கள்...உங்களின் வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து நல்ல முறையில் உங்களை விடுவித்துக் கொள்கிறேன். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் தூதரையும் (தன்னையும்) மறுமையின் வீட்டையும் விரும்புவோராயின், நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள நன்மையை நாடுவோர்க்கு மகத்தான கூலியைத் தயாராக்கி வைத்துள்ளான்,'' என்பதே அந்த வசனம்.


"அதாவது, ஆடம்பர வாழ்வுக்கு ஆசைப்பட்டு, நான் தருவதற்கு மேல் செலவழிக்க நினைப்பவர்கள் என்னை விட்டு பிரிந்து கொள்ளலாம்' என்ற ரீதியில் இந்த வசனம் அமைந்தது. நாயகம்(ஸல்) அவர்கள் வீட்டுக்குச் சென்றார்கள். தன் மனைவி ஆயிஷா அம்மையாரை அழைத்து, இந்த வசனத்தை ஓதிக்காட்டினார்கள். அந்த அம்மையார், அதை மற்றவர்களிடம் சொல்ல, அல்லாஹ் மூலம் விடுக்கப்பட்ட அந்த எச்சரிக்கையைக் கேட்டு அவர்கள் திடுக்கிட்டனர். எல்லோரும், தங்கள் செய்கைக்காக நபிகளாரிடம் மன்னிப்பு கேட்டனர். அடுத்தவர்கள் அணியும் நகை, ஆடை, உபயோகிக்கும் பொருட்களைப் பார்த்துவிட்டு, தனக்கும் அதுபோல் வேண்டும் என எண்ணாமல் இருப்பதைக் கொண்டு வாழ வேண்டும் என்பதை இன்றைய ரம்ஜான் சிந்தனையாகக் கொள்வோம்.


ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்:


ரம்ஜான் மாதத்தில் நோன்பு நோற்கும் கட்டாயக் கடமையைச் செய்து வருகிறோம். நோன்பு நோற்பதின் நோக்கமே, பசியின் கொடுமையை உணர்ந்து கொள்ளத்தான். பசித்திருப்பவர் ஒருபுறம், நன்றாகப் புசித்திருப்பவர் ஒருபுறம் என சமுதாயம் இரு பிரிவாக இருக்கிறது. பசியின் கொடுமையை உணரத்தான் பகல் முழுவதும் ஏதும் சாப்பிடாமல் நோன்பு நோற்கிறோம். இதனால் தான், ரம்ஜான் மாதத்தில் மிக அதிகமாக தானம் செய்ய வலியுறுத்தப்படுகிறது. தானம் செய்வதன் மூலம் ஏழைகளின் பசி தீர்கிறது. ஏதுமில்லாத ஏழை கூட, ஒரு டம்ளர் தண்ணீராவது, தவித்து வந்தவர்க்கு தானம் செய்ய வேண்டும். அத்துடன் பல நற்செயல்களையும் செய்ய வேண்டும்.குழந்தைகளுக்கு மார்க்கக் கல்வியைப் போதிக்க வேண்டும். நன்மையான வார்த்தைகளை அவர்களிடம் பேச வேண்டும்.

உற்றார் உறவினர்களுடன் சச்சரவு கூடாது. அவர்களுடன் இணைந்து வாழ வேண்டும். பிறருடைய பாரத்தையும் நாமே சுமக்க வேண்டும். அதாவது, ஒரு ஏழைக்குடும்பத்தையாவது நாம் ஏற்றுக் கொண்டு, அவர்களுக்குரிய தேவையை நிறைவு செய்ய வேண்டும். அனாதைகளுக்கு உதவி செய்ய வேண்டும். விருந்தினர்களை முகம் மலர உபசரிக்க வேண்டும்.பெற்றோரை வேதனை செய்பவனை பார்த்துக் கொண்டிருக்கும் இறைவன், "நீ எத்தனை வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டாலும், உன் பாவங்களை மன்னிக்கமாட்டேன்,' என்று சொல்லியுள்ளதை நினைவில் கொண்டு, பெற்றவர்களுக்கு உரிய மரியாதை செய்ய வேண்டும்.


""அல்லாஹ் பரிசுத்தமானவன். பரிசுத்தத்தையே விரும்புகிறான், அல்லாஹ் மணமுள்ளவன். நறுமணத்தை விரும்புகிறான். எனவே, உங்கள் இல்லங்களை பரிசுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்,'' என்ற குர்ஆன் வசனத்தை நினைவில் கொண்டு, வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.இப்படிப்பட்ட நல்ல சிந்தனைகளுடன் நோன்பை மகிழ்ச்சியுடன் நோற்போம்.


நேர்மையாக வாழ்வோம்:


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகுந்த நேர்மையாளர். ஒருமுறை,அவர்கள் மதீனா நகருக்கு வெளியே கூடாரம் கட்டி தங்கியிருந்த வியாபாரிகளிடம் சென்றார்கள். அந்த வியாபாரிகள் இளைப்பாறிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த சிவப்பு நிற ஒட்டகத்தை அண்ணலாருக்குப் பிடித்து விட்டது. அதை வாங்க எண்ணி, அதன் விலையைக் கேட்டார்கள். அவர்கள் விலையைச் சொன்னதும், அதன் மூக்கணாங்கயிற்றைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.


"இவர் என்ன பணம் தராமல் செல்கிறாரே! இவர் யார் என்பதைக் கூட நாம் விசாரிக்கவில்லையே,'' என்று வியாபாரிகள் பேசிக்கொண்டிருந்த போது, அவர்களுடன் வந்த ஒரு பெண்மணி, ""கவலையை விடுங்கள்! அந்த முகம் எவ்வளவு பிரகாசமாக இருக்கிறது தெரியுமா? இப்படிப்பட்ட ஒருவரை இதற்கு முன் நாம் பார்த்ததே இல்லை. இத்தகைய களங்கமற்ற முகத்தை உடையவர் நம்மை ஏமாற்ற மாட்டார். பணமோ அல்லது ஒட்டகத்தின் விலைக்கு ஈடான பொருளோ நிச்சயம் வந்து விடும்,'' என்றார். அன்று மாலையே, அந்த ஒட்டகத்தின் விலைக்கு ஈடான பேரீச்சம் பழங்களையும், பிற உணவு வகைகளையும் நாயகம்(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.


அண்ணலாருடன் பங்குதாரராக இருந்த சாயிப் என்ற வர்த்தகர் அவரைப் பற்றிச் சொல்லும் போது, "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், என்னோடு வர்த்தகத்தில் பங்காளியாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் அதில் நடந்து கொண்ட முறை மிகவும் உன்னதமாகவும், குறைசொல்ல இடமற்றதாகவும் இருந்தது,'' என்றார். நேர்மையுடன் வாழ்ந்து பழக வேண்டும் என்பதே இன்றைய ரம்ஜான் சிந்தனை.


பெற்றவர்களிடம் கனிவுடன் நடப்போம்:


"இந்த உலகில் நான் எத்தனை சோதனைகளை அனுபவிக்கிறேன். யா அல்லாஹ்! இதில் இருந்து எனக்கு விடுதலை கிடையாதா?' என்று கதறிக் கொண்டிருப்பவர்களில் பெரும்பகுதியினரின் வாழ்க்கை வரலாற்றை அலசினால், அவர்கள் பெற்றவர் களைக் கவனிக்காதவர்களாகத் தான் இருப்பார்கள். இவர்களைப் பற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறும் போது, ""தாய் தந்தையர்க்கு துன்பம் செய்வதைத் தவிர மற்ற எல்லா பாவங்களுக்கும் அல்லாஹ் மன்னிப்பளிக்கின்றான். பெற்றோர்களுக்கு துன்பம் செய்தவனுக்கு மரணத்திற்கு முன் தண்டனை வழங்கி விடுகின்றான்,'' என்கிறார்கள். குர்ஆனில் அல்லாஹ், "தாய் தந்தையரிடம் கருணையோடும், கனிவோடும் பழகுங்கள். அவர்கள் தான் உங்களை அறியாப்பருவத்தில் வளர்த்துப் போஷித்தவர்கள்,'' என்று அழகாகச் சொல்கிறார்.


ஒருமுறை நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ""அண்ணலாரே! பாவம் ஒன்றைச் செய்து விட்டேன். அதில் இருந்து மீள வழியிருக்கிறதா?'' என்றார். அண்ணலார் அவரிடம், "உமக்கு தாய் இருக்கிறாரா?'' என்றதும், "இல்லை'' என பதிலளித்தார் வந்தவர்.
"சிற்றன்னை இருக்கிறாரா?'' என்றதும், "ஆம்' என்றார்.
"அப்படியானால் உமது சிற்றன்னைக்கு சேவை செய்யும்,'' என அவர்கள் கூறினார்கள்.
"தாயின் காலடியிலேயே சொர்க்கம் இருக்கிறது' என்று அவர்கள் அருமையாகச் சொன்னார்கள்.
பெற்றவர்களுக்கு சேவை செய்வது ஒவ்வொருவரின் கடமை என்பதே இன்றைய ரம்ஜான் சிந்தனை.


தேவையற்ற பேச்சு வேண்டாமே!:


ரம்ஜானின் சிறப்பே தொழுகையை அதிகப்படுத்துவதுதான். இந்த இனிய மாதத்தில், பள்ளிவாசலின் சிறப்பையும், அங்கே நடந்து கொள்ள வேண்டிய விதம் பற்றியும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்வதைக் கேளுங்கள். ஒருமுறை அவர்கள் வானுலகம் சென்றிருந்த போது, அங்கே சிலர் பன்றிக்கறியை தின்று கொண்டிருந்தனர். ""இவர்கள் யார்?'' எனக் கேட்டார்கள் நாயகம் (ஸல்) அவர்கள். அதற்கு ஜிப்ரில்(அலை) அவர்கள், ""இவர்கள் பள்ளிவாசலில் அமர்ந்து ஊர்வம்பு அளந்து கொண்டிருந்தவர்கள்,'' என்று பதிலளித்தார்கள்.


பள்ளிவாசலுக்குள் உலக விஷயங்கள் பற்றியோ அல்லது வேறு காரியங்கள் குறித்தோ பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நெருப்பை மிதித்தது போன்ற உணர்வை அடைவார்கள். பள்ளிவாசலை விட்டு உடனே வெளியேறி, பேச வேண்டியதை வெளியில் வைத்து பேசிவிட்டு, மீண்டும் பள்ளிவாசலுக்குள் நுழைவார்கள். இதிலிருந்து, இறைவழிபாட்டால் நன்மைகளைச் சுமந்து செல்வதற்காக பள்ளிவாசல் வருபவர்கள் வீண்பேச்சுகளின் மூலம் பாவ மூட்டையை சுமந்து கொண்டு செல்கிறார்கள் என்பதை அவர்கள் உணர வைக்கிறார்கள். அது மட்டுமல்ல, ஏதாவது ஒரு செயல் கவலை தருமானால், அவர்கள் உடனே தொழுகைக்கு சென்று விடுவார்கள்.
இதுபற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மேலும் சொல்வதாவது:



* எமது உம்மத்தவர்களில் அல்லாஹ்வுக்குப் பயந்தவர்கள் பள்ளிவாசல்களில் தங்கியிருப்பார்கள்.


* ஒரு காடைக்குருவி போன்ற சின்னஞ்சிறிய பள்ளிவாசலைக் கட்டுபவருக்காக, சொர்க்கத்தில் அல்லாஹ் ஒரு மாளிகையை எழுப்புகிறான்.


* பாங்கொலி கேட்டு தொழுகைக்கு வராதவர் அநியாயமும், இணை வைத்தலும், வஞ்சகத்தன்மையும் உடையவர் ஆகிறார். பள்ளிவாசலுக்கு செல்லும்போது வீண்பேச்சு வேண்டாம் என்பது இன்றைய ரம்ஜான் சிந்தனையாக அமையட்டும்.
எதையெல்லாம் சிந்திக்க வேண்டும்?: ரம்ஜான் மாதம் இன்று பிறந்துள்ளது. இந்த இனிய நாளில், ஒரு மனிதன் தினமும் என்னென்ன சிந்திக்க வேண்டும் என்பது பற்றிச் சொல்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். இதுவே இன்றைய ரம்ஜான் சிந்தனையாக அமையட்டும்.


* மனிதர்கள் செய்த உதவியைச் சிந்திப்பதை விட இறைவன் செய்த உதவியை சிந்தனை செய்யுங்கள். நீங்கள் செய்த நன்மைகளைப் பற்றி சிந்திப்பதை விட, செய்த பாவங்கள் பற்றிச் சிந்தியுங்கள். நீங்கள் உயிருடன் வாழப்போவதைச் சிந்திப்பதைவிட, வருகின்ற மரணத்தைப் பற்றிச் சிந்தனை செய்யுங்கள்.


* மற்றவர்களின் குற்றங்களை நோட்டம் இடுவதை விட, உங்களின் குற்றங்களை நோட்டமிடுங்கள். உப்பை நீர் கரைப்பது போன்று, நற்குணம் உங்கள் பாவங்களைக் கரைத்துவிடும். கள்ளின் மண்டி தேனைக் கெடுத்துவிடுவது போன்று, துர்க்குணம் வணக்கங்களைக் கெடுத்துவிடும். உன் வாயிலாக இறைவன் ஒரு மனிதனுக்கு நேர்வழி காட்டுவது இவ்வுலகத்தையும், இதிலுள்ள யாவற்றையும் விட உனக்கு நன்மை பயப்பதாகும்.


* எவர் அண்டை வீட்டாரைத் துன்புறுத்து கின்றாரோ அவர் என்னைத் துன்புறுத்தியவராவார். அன்பு செலுத்தாதவன் அன்பு செலுத்தப் படுவதற்கு அருகதையில்லாதவன்.


* தர்மம் செய்ய இயலாதவன் ஒரு நற்செயல் செய்வானாக அல்லது ஒரு கெட்ட செயலில் இருந்து விலகிக் கொள்வானாக. அதுவே அவனது ஈகை.


* உங்களை நம்பி ஒருவன் ஒரு செய்தியைச் சொன்னால், அதை அடைக்கலப் பொருள் போல பாதுகாத்து வையுங்கள்.


* தன் பிள்ளைகளைப் பிறர் நல்லவிதமாக நடத்த வேண்டும் என்று விரும்புவர், அனாதைப் பிள்ளைகளை நல்லவிதமாக நடத்த வேண்டும்.


* மனிதன் எதைச் செய்கிறானோ அதை எந்த எண்ணத்துடன் செய்கிறான் என்பதை தான் இறைவன் கவனிக்கிறான்.
இந்த சிந்தனை மொழிகளை ரம்ஜான் மாதத்தில் மட்டுமில்லாமல், தினமும் படியுங்கள். உங்களுக்குள் நற்குணம் கொடி கட்டி வளரும்.

ஆறுன்னா ஆம்பளை, ஏழுன்னா பொம்பளை, எட்டுன்னா முட்டாள்.



ஒரு ஓவியக் கண்காட்சி. மாடர்ன் ஆர்ட். ஓவியம் வரைஞ்சவர் ஒரு இடத்திலே நின்னு பார்த்துக்கிட்டு இருந்தார். படங்கள் எல்லாம் பார்த்துட்டு , வந்த ஒருத்தர் - அவரை பார்த்து,  "சார் , பிரமாதம் சார்.. அப்படியே தத்ரூபமா வரைஞ்சு இருக்கிறீங்க.. பார்த்ததுமே அப்படியே நாக்குலே தண்ணி ஊறிடுச்சு.. கிரேட் சார்..." னு கைகொடுத்து இருக்கார்.. இவருக்கு ஒண்ணுமே புரியலை..ரொம்ப சந்தோசம் சார்.. எப்படி பீல் பண்ணுறீங்க? விட்டா அப்படியே பிச்சு தின்னுடுவேன்.. ஆம்லெட்டை இப்படி ஒருத்தர் வரைஞ்சு நான் பார்த்ததே இல்லை. நம்ம ஓவியரு , மனுஷன் நொந்து நூலாகிட்டார்.. அவர் வரைஞ்சு இருந்தது, சூரிய உதய காட்சி.. 

 இந்த மாதிரி , வாழ்க்கையை நம்ம கண்ணோட்டத்திலே பார்க்கும்போது - ஒரு ஆங்கிள் லே தெரியுது. ஆனா, அடிப்படை வேற ஒன்னா இருந்து தொலையிது..
கல்யாணம் முடியாம கஷ்டப்படுறவங்களுக்கு , கடவுள் ஏன்தான் இப்படி சோதிக்கிறாரோனு கவலை. முடிஞ்சவங்களுக்கு , ச்சே , கடவுள்  நம்மளை இப்படி சோதிச்சுப்புட்டாரேனு  கவலை.

குடும்ப தலைவன், திறமையா , நல்லா சம்பாதிக்க தெரிஞ்சவனா , ஆரோக்கியமா , குடும்பத்து மேல அக்கறையா இருந்தா - போதும் அவன் தலைவனா இருக்கலாம். இல்லை, டப்பா டான்ஸ் ஆடிடும் வீட்டுல. ஆனா எத்தனை பேரால அப்படி இருக்க முடியுது?

இன்னைக்கு நாம பார்க்கப் போறது , ஆரோக்கியம் பத்தி கொஞ்சம்....

 எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார். வாழ்க்கையில நீங்க கொஞ்சம் தாமதமாக தெரிஞ்சு கிட்ட விஷயம் எதுன்னு சொல்ல முடியுமா சார்னு கேள்வி. ஆயில் புல்லிங் னு ஒரு
 விஷயம் சார். நல்லெண்ணெய் கொஞ்சம் வாயில் விட்டு , சிறிது நிமிடம் வைச்சு , வாய் கொப்பளிக்கிறது. காலைலேயும், இரவு தூங்கும் முன்பும். அற்புதமான ஒரு அனுபவம் சார். கண்ணுக்கு அவ்வளவு நல்லது. ஒரு மாசம் பண்ணினதுக்கே , அவ்வளவு திருப்தியா இருக்கு. எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாலே ஆரம்பிச்சு இருந்தா எவ்வளவோ , நல்லா இருந்து இருக்கும்ங்கிறார்.

 இதயம் கம்பெனி, ஜோதிகா படம் போட்டு வருஷக் கணக்கா இதை சொல்லிக் கிட்டு இருக்கு... நாமளும் கொஞ்சம் முயற்சி பண்ணிப் பார்ப்போமா?

 ஆறு மணி நேரம் தூங்குகிறவன் ஆம்பிளை, ஏழு மணி நேரம் தூங்கினா பொம்பளை எட்டு மணி, நேரம் தூங்கினா முட்டாள் என்று சொல்வாங்க, கேள்விப்பட்டு இருக்கீங்களா..?  அதெல்லாம் , நமக்கு கொஞ்சமாவது ரோஷம் வரட்டும் , சீக்கிரம் தூங்கி எழுந்துக்கட்டும்னு நம்ம வீட்ல, எங்க கிராமத்துல சொல்ற விஷயங்கள். எஹே.. ஹே , தூக்கம்ங்கிறது பெரிய வரம். உனக்கு கிடைக்கலைனா, பெருசு,, என்ன ஏன் பாடா படுத்துறேனு நெனைச்சு இருப்போம்..  இல்லையா, மேலே படிங்க...
 
இன்னைக்கு நாம எல்லாம், பயங்கரமான ஒரு காஸ்மோ பாலிட்டன் கல்ச்சர்ல இருக்கோம். நகரம் / மாநகரம் என்று பெரிய , பெரிய கம்பெனிகளில் வேலை பார்க்கும், மெத்தப் படித்தவர்கள் , கைநிறைய சம்பளம் வாங்குபவர்கள் என்று இருப்பவர்கள் அனைவரும், குடிப்பழக்கம் உள்ளவர்கள் தான். தன் உடல் நலம், குடும்ப நலம் என்று எதிலும் அக்கறை இல்லை. பனிரெண்டு மணிநேரம் , கம்பெனியில் வேலை - வொர்க் ஆல்ககாலிக் என்ற ஒரு போர்வை - வரும் வழியில் அல்லது வீட்டிலேயே என்று ஒரு உற்சாக பானம் அருந்தி , மிதமான ஒரு போதையில் தான் தூங்குகிறார்கள். இது கொஞ்சம் நல்ல நிலையில், சம்பாதிப்பவர்களுக்கு. (வீட்டுல சரக்கு அடிக்க ஆரம்பிச்சுட்டா , அது ஹை கிளாஸ் பேமிலியாம்ல ... ஆமாவா? ) . மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு இதை வைச்சுத்தான் ரொம்ப பேரு சொல்றாங்க..

சம்பளம் கம்மியாக சம்பாதிப்பவர்களுக்கு , அதுவே ஒரு காரணமாகி விடுகிறது. கடன் தொல்லை, கடனை அடைக்க கடன் இப்படி நிறைய காரணங்கள். இளைஞர்களுக்கு, காலேஜ் பசங்களுக்கு இருக்கவே இருக்கு - மச்சி , அவ என்னை ஏமாத்திட்டாடா.. டயலாக்கு. தினமும் இவர்களுக்கு இது பழக்கம் ஆகி விடுகிறது. காலம் எவ்வளவு வேகமாக மாறிவிடுகிறது பாருங்கள்.

 நான் சின்னப் பையனாக இருந்த காலத்தில் எல்லாம் எங்கள் ஊரில் குடிப்பவர்கள் வெறுமனே அஞ்சு / ஆறு பேர்தான். ஏதாவது விசேஷம் , கடா வெட்டுன்னு இருந்தா , ஊரு பெருசுங்க , வாத்தியாரு எல்லாம் - ஒரு குவாட்டர் பாட்டில் வாங்கி, ஒரு ஆறு பேர் சாப்பிடுவாங்க. ஒரு பெக்குக்கு ஆட்டம் போட்ட வாத்தியார், இன்னைக்கு தினம் ஒரு ஹாப் சாப்பிடுறாராம். காலையில் கடை திறக்குறதுக்கு முன்னே, ஏக்கத்தோட ஒரு பத்து பேராவது அங்கே நிக்கிறாங்க. 


இன்னைக்கு ஊரில் பாதிப் பேரு தினமும் குடிக்கிறவங்க தான். எதுக்கு குடிக்கிறோம்னு இப்போ இவங்களுக்கு காரணம் கூட தெரியாது. இதுல மாப்ள , நான் ரொம்ப ஸ்டெடி னு  சொல்லிக்கிட்டு வண்டி ஓட்டுறாங்க.


 என் கிளாஸ்மேட் பொண்ணு ஒருத்தி , கலயாணமான மூன்றே வருஷத்தில் கைம்பெண் ஆகிவிட்டார். நல்லா வசதியான வீட்டில் தான் கட்டிக் கொடுத்தார்கள். சென்னையில் சிவில் இன்ஜினியரிங் முடித்த மாப்பிள்ளை . சந்தோஷ மிகுதியில் ஒரு இரவு வேளை - பைக்கில் ரோட்டுக்குப் பதில் , ரோடு டிவைடர் மேல் பயணிக்க , ஸ்பாட்டிலேயே மரணம். இருபத்தி இரண்டு வயதில் இன்பமயமாக தொடங்கிய தாம்பத்யம், ஒரே நாள் சூறாவளியில் சின்னா பின்னமாகி விட்டது. ஒரு வயது கைக்குழந்தை. அது என்ன பாவம் செய்தது?  இவர்கள் இருவரின் எதிர் காலத்திற்கு யார் பதில் சொல்ல ? குடி குடியைக் கெடுக்கும் என்று சொன்னவன் மடையன்தான் , அது உங்கள் சொந்த வாழ்வில் பாதிப்பு ஏற்படுத்தும்வரை. இதே மாதிரி நிதானம் இழந்து , நம் வாழ்வில் எத்தனை முடிவுகள்... இன்னும் இது தொடரணுமா?

விதி என்று சொன்னாலும், மரணம் யாருக்கும் எந்த நொடியிலும் ஏற்படும் என்றாலும்,  கொஞ்சம் கொஞ்சமாக தற்கொலை பண்ணிக் கொள்ளும் இது போன்ற பழக்கங்களுக்கு மெத்தப் படித்த மேதாவிகளும் பலிகடா ஆவதுதான் கொடுமை.

அது போக , எல்லா தமிழ் படத்துலேயும்,   இப்போ ஹீரோ - தண்ணி யடிக்காம இருக்கிறதே இல்லை. குழந்தைகளுக்கு அந்த காட்சிகள் எல்லாம் , ஒரு சர்வ சாதாரண விஷயமாகிவிட்டது. அவங்க தலைமுறையிலே இன்னும் எப்படி இருக்குமோ.. தெரியாது .

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதுதான் நமக்கு கைவந்த கலையாயிற்றே.
 எட்டு மணி நேரம் தூங்குகிறவன் எப்படி முட்டாளாவான் என்று அடிக்கடி யோசிப்பேன்.எட்டு மணி நேரத் தூக்கம் என்பது சராசரி வாழும் வயது (70) பிரகாரம் இருபத்தி மூன்று வருஷம். வாழ்க்கையில் இருபத்தி மூன்று வருஷங்களை தூங்கி கழித்தால் எத்தனையோ வாய்ப்புகளை நழுவ விட்டு விடுவோம் என்கிற அர்த்தத்தில் இருக்கலாம். குடிக்கிறவங்களுக்கு இன்னும் ஒரு பத்து வருஷம் அதிகமாகும்.
ஆனால் தூக்கத்தை விஞ்ஞான கண் கொண்டு பார்த்தால் வேறு விதமான அர்த்தங்களைச் சொல்லலாம். தூங்குகிறவர்கள் எப்படி சுவாசிக்கிறார்கள் என்று கவனித்திருக்கிறீர்களா?
நீண்ட உள்ளிழுப்பு, சிறிது இடைவெளி, அப்புறம் நீண்ட வெளிவிடுதல். ஒவ்வொரு சைக்கிளும் இருபத்தைந்து செகண்டாவது எடுக்கும். இப்படிப்பட்ட சுவாசம் என்ன நன்மையைத் தருகிறது? காற்றில் இருக்கும் பிராண வாயுவை முழுசாக உடம்பு எடுத்துக் கொள்கிறது. மூளையின் செல்கள் ரீஜெனரெட் ஆக இந்த பிராணவாயு உதவுகிறது.இது மாதிரித் தூக்கம் நாலு மணி நேரம் தூங்கினால் போதும்.
ஆனால் ஏன் எட்டு மணி நேரம் தூங்கினாலும் அலாரத்தை அமர்த்திவிட்டு  புரண்டு படுத்து தூங்குகிறோம்?
இரண்டு காரணங்கள்.
ஒன்று, பகலை விட இரவு நேரங்களில் பிராணவாயு குறைவாக இருக்கிறது. ஏனென்றால் தாவரங்கள் இரவில் பிராண வாயுவை உள்ளிழுத்து கரியமில வாயுவை அதிக அளவில் வெளியிடுகின்றன.
இரண்டாவது, நமது தேசிய பறவை கொசுவுக்கு பயந்து எல்லா ஜன்னல்களையும் இறுக்கமாக மூடி விட்டுத் தூங்குகிறோம். அறையில் இருக்கிற பிராண வாயு இரண்டு மணி நேரத்தில் காலியாகி அதற்கப்புறம் கரியமில வாயுவைத்தான் சுவாசிக்கிறோம்.
விடிகாலை நேரத்தில் ஓசோன் அதிகமாக இருப்பதால் ராத்திரி கிடைக்காத பிராணவாயு விடிகாலையில் அதிகமாகக் கிடைக்கிறது. அதனால் சுகமாகத் தூக்கம் வருகிறது.  விடிகாலை எழுந்து , வேர்க்க விறுவிறுக்க உடற் பயிற்சி செய்பவர்கள் , நமக்கு மட்டும் தெரிவதே இல்லை ..
சரி, அப்படியானால் எல்லாரும் எட்டுமணி நேரம் தூங்கத்தான் வேண்டுமா?
அவசியமில்லை.
தூக்கத்தில் சுவாசிக்கிற அதே ரிதம் பிராணாயாமத்தில் உண்டு.
பிராணாயாமம் கற்றுக் கொண்ட புதிதில் ஆழமில்லாத தூக்கமும், ரொம்ப அதிகாலை எழுந்து விடுகிற பழக்கமும் வரும். ஆனாலும் நாள் முழுக்க புத்துணர்ச்சியோடு இருக்க முடியும்.
பிராணாயாமத்தின் சிறப்பை எடுத்துச் சொல்கிற போதெல்லாம்,
 “அதெல்லாம் மூட நம்பிக்கைங்க” என்று அதையும் மூட நம்பிக்கையில் சேர்த்து விடுகிற நபர்கள் இருக்கிறார்கள். ஒருவேளை, நமது இணைய தளத்தில் இதைப் பற்றி எழுதுவதால், ஆமான்னு அடிச்சு சொல்லிடுவாங்களோ..?

Wednesday 17 August 2011

Top 10 Most Expensive Weddings




10. Tom Cruise and Katie Holmes ($2 million) 

Click here to join nidokidos
They’re still together, almost 6 years later, Tom Cruise and Katie Holmes and they come in at number 10 on the top ten list of grandest weddings of all time. After Tom proposed to Katie on the top of the Eiffel Tower, 19 months before the wedding date, they were married in Italy at the 15th century castle, Odescalchi Castle in Rome on November 18th, 2006. Giorgio Armani designed all the apparel for the bridal party and Andrea Boccelli gave a musical performance. The wedding was attended by 150 guests. The couple honeymooned in Maldives following the elaborate wedding event. 

9. Paul McCartney and Heather Mills ($3 million) 

Click here to join nidokidos
Fireworks, grand feasting and dancers dressed in Indian costume performed for Paul McCartney and Heather Mill’s wedding in 2001. The $3 million dollar wedding ceremony took place in County, Monaghan, Ireland. The ceremony was held in St. Salvador’s Church and the reception took place at Castle Leslie with 300 guests. Heather Mills wore a dress she herself fashioned and carried roses named after her husband. Following their affair they honeymooned at a private island in Seychelles. They spent their first evening on a $20 million yacht for $19,000 a night. 

8. Liza Minnelli and David Gest ($3.5 million) 

Held at the Manhattan’s Collegiate Church in 2002, with a sum total of 850 wedding guests, the wedding was a monumental event with guests including Natalie Cole singing “Unforgettable”, a 60-piece orchestra also kept the guests entertained along with Tony Bennett. The wedding included a $40,000 6-foot, 12-tier cake, a staff of 500 and a bill of over $700,000 in flowers.  7. Elizabeth Hurley &ArunNayar ($7 million)  Click here to join nidokidos
Wed on June 29, 2006, Elizabeth Hurley and ArunNayar, an Indian businessman married in a 15th century castle in Sudeley Castle in Gloucestershire in Britain. The festivities lasted for 8 days across the 2 continents of Europe and Asia. The proceedings began at Sudeley and then the wedding party traveled to UmaidBhawan Palace in Jodhpur, India. The palace suite cost $10,000 a night. 

6. DelphineArnault and Alessandro VallarinoGancia ($7 million) 

Click here to join nidokidos
Who said a bride isn’t worth it, especially when she’s the daughter of the wealthy French businessman, Bernard Arnault? A father coined the ‘pope of fashion’ in France too means of course, a fancy dress, in fact, one so fancy that it was fashioned by the famous designer, John Galliano. It certainly was a price you’d not find on the racks at David’s Bridal either. Add to a wealthy bride a wealthy groom with a family with a wine dynasty business and you’ve got a splendid party, with of course, plenty of fine wines. They couple wed in 2005 at the Cote d’ Azur in France. The venue was decorated with 5,000 white roses. Harper’s Bazaar called it the “Wedding of the Year”. 

5. Wayne Rooney & Coleen McLoughlin ($15 million) 

Click here to join nidokidos
Okay if that previous wedding bill wasn’t enough to impress you, try doubling that with a few little extras and you’ve got the wedding of Wayne Rooney and Coleen McLaughlin at $15 million. Colleen McLoughlin, a television presenter/product endorser plus a Manchester United/England football star resulted not only in an expensive wedding but an interesting one at that. The 4 day wedding ceremony took place in Villa Durazzo in Portofino Italy on June 12, 2008. With stunning views of the Italian Rivera on a yacht with 64 guests flown in on five different private jets, the ambiance was beautiful. After spending almost $4 million dollars on a dress designed by Georgia Chapman’s Marchesa label, guests had to wonder if the budget had run out after being served pizza for the reception. In the end, they were able to cut costs of $5 million by allowing Britain’s OK! Magazine to publish exclusive information and pictures about the event, that is, after the pizza was served. 

4. VikramChatwal and PrivaSachdey ($20 million) 

Click here to join nidokidos
Let’s make it an even 20 after 15, that is, $20 mil, and then everything will be up to par for the wedding of VikramChatwal, son of a New York hotel magnet and a jet-setting hotelier and actor and for his model/actress/investment banker bride, PriyaSachdey (who ever said a man couldn’t have it all). The wedding took place on February 18th, 2006 and is known as one of the most luxurious weddings ever in all of India. Bill Clinton was on the guest list along with many other well-known, high-powered people. The wedding took place over 10 days and was spread across 3 cities in India (Mumbai, Udaipur, and Delhi). There were 600 guests from 26 countries who were all retrieved for the event on chartered jets. 

3. Miss Yugoslavia Aleksandra Kokotovic and AndreyMelnichenko ($30 million) 

Click here to join nidokidos
Topping a $20 million dollar wedding isn’t easy but for Miss Yugoslavia Aleksandra Kokotovic and AndreyMelnichenko, it wasn’t hard with a $30 million dollar extravaganza that made history in world famous weddings. AndreyMelnichenko, the Russian billionaire and founder of MDM Bank and the Serbian model, Miss Yugoslavia Aleksandra Kokotovic married in Cote D’ Azur, France on September 3rd, 2005. There were performances by Christina Aguilera and Whitney Houston for a full house of guests of the rich and famous. The singers alone cost $3.6 million each to perform. 

2. Sheikh Mohammed bin Rashid Al Maktoum and Princess Salama ($44.5 million) 

Click here to join nidokidos
The Arabs really know how to have a wedding party and especially the ruler of Dubai who married Princess Salama in 1981. The wedding earned a place in the Forbes list of “Billionaire Weddings”. A stadium was built just for the occasion to entertain 20,000 guests for 7 days of luxury. 

1. Vanisha Mittal &Amit Bhatia ($78 million) 

Click here to join nidokidos
The Indians, however, outshined the Arabs on November 18th, 2004 when Vanisha Mittal &Amit Bhatia wed in what is recorded as the most expensive wedding in history. 1,000 guests from around the world attended after each had received a 20-page silver card to the event which included all the lavish details the entire venue that lasted for 5 days. The party took place at the finest chateau and garden in France, the 17th century, Vaux le Vicomte. The bride, Vanisha Mittal, daughter to the steel tycoon Lakshmi Mittal and Amit Bhatia, the investment banker wed in sheer riches. A performance by Kylie Minogue the pop singer was the high-lighted attraction to the event. 100 different dishes were prepared by a top Calcutta Chef and the wine cost $1.5 million. The costs of everything else we’ll leave to your imagination! 
Weddings are a happy time for all, especially for the guests who were able to attend the top ten most expensive weddings in history. Of these wedding events, the real two questions are who is still together and who will be next to top the list?

Sunday 14 August 2011

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள் - the temples of 27 stars

நமது ஆன்மீக அன்பர்களின் நலம் கருதி , ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையே புதுப்பித்துக் கொண்டவை.  எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை. 

இவையெல்லாவற்றையும் விட முக்கியமான ரகசியம் - இந்த நட்சத்திரங்களுக்குரிய தேவதைகள் , சூட்சும ரீதியாக இங்கே தினமும் ஒரு தடவையாவது தங்களுக்குரிய ஆலயம் சென்று வழிபாடு செய்கின்றன.  
  
 மனிதராய் பிறந்த அனைவர்க்கும், அவரவர்  கர்ம வினையே -  லக்கினமாகவும், ஜென்ம நட்சத்திரமாகவும், பன்னிரண்டு வீடுகளில் நவக் கிரகங்கள் அமர்ந்து -  பெற்றெடுக்கும் பெற்றோர்களையும், பிறக்கும் ஊரையும்,  வாழ்க்கை துணையையும் , அவர் வாழ்வில் நடக்கும் முக்கிய சம்பவங்களையும் , வாழ்க்கையையுமே தீர்மானிக்கிறது. 
நமது பூர்வ ஜென்ம தொடர்புடையஆலயங்களுக்கு, நம்மை அறியாமலே நாம் சென்று வழிபடும்போது,  நமது கர்மக்கணக்கு நேராகிறது. அப்படி நிகழும்போது நம் வாழ்வில் ஏற்படும் பல தடைகளும், தீராத பிரச்னைகளும் தீர்ந்து , மனதளவில் நமக்கு பலமும், மாற்றமும் ஏற்படுகின்றன.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை  -  உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் தினத்தன்று , ஆத்ம சுத்தியுடன், நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும்.
உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட  இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வெகுவாக மட்டுப்படும். 

ஆலயங்களும், அமைவிடங்களும் :

அஸ்வினி - அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்




இருப்பிடம்: திருவாரூரில் இருந்து 30 கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டி உள்ளதுபஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீதூரத்தில் கோயில் உள்ளது.

பரணி - அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் 

 
 இருப்பிடம்: மயிலாடு துறையிலிருந்து(15 கி.மீ.)நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் நல்லாடை என்னும் ஊரில்  உள்ளது.

 கார்த்திகை - அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில்

 

 இருப்பிடம்:  மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் கஞ்சாநகரம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரை கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். 

ரோஹிணி -  அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்
 

 இருப்பிடம்: காஞ்சிபுரம் ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில் அமைந்துள்ளது.

மிருக சீரிஷம் -  அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்

 

 இருப்பிடம் : தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ., தூரத்தில்
முகூந்தனூர் உள்ளது. இந்தஸ்டாப்பில் இருந்து, ஒரு கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம். 


திருவாதிரை - அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில்



இருப்பிடம் : தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ளபட்டுக்கோட்டை சென்று, அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தில் உள்ள இந்த ஆலயத்தை அடையலாம்.

புனர் பூசம் - அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்



இருப்பிடம் : வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், 67 கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி உள்ளது. பஸ்ஸ்டாண் டில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள பழைய
வாணியம் பாடியில் கோயில் உள்ளது.


பூசம் - அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில்
  
 


இருப்பிடம்: பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கி.மீ., சென்றால் விளங்குளம் விலக்கு வரும். அங்கிருந்து தெற்கே 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளத்தை அடைய வழியிருக்கிறது. 

ஆயில்யம் - அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்

 
 இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். திருவிசநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு

மகம் - அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்
  
 

இருப்பிடம்: திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.

பூரம் - அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில் 


 
  இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ., சென்றால் வரும் திருவரங்குளம் என்னும் ஊரில் ஆலயம் உள்ளது. 

உத்திரம் - அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்
  
 

இருப்பிடம் : திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்று மங்கலம் என்னும் ஊரில் உள்ளது.

ஹஸ்தம் - அருள்மிகு கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில்
  
 
 இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ. தூரத்தில் கோமல் என்னும் ஊரில் உள்ளது.குத்தாலத்திலிருந்து பஸ், ஆட்டோ வசதி உள்ளது. 

சித்திரை - அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில் 


 
இருப்பிடம்: மதுரையில் இருந்து 23 கி.மீ., தூரத்திலுள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. வியாழன், பவுர்ணமி தினங்களில்  கோயில் வரை பஸ்கள் செல்லும். மற்ற நாட்களில் ஆட்டோவில் செல்ல வேண்டும்.

சுவாதி - அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில்
  
 

 இருப்பிடம்: சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ஊருக்கு செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் சித்துக்காடு என்ற ஊரில் இத்தலம் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு என்பதால், பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்று திரும்பலாம்.

விசாகம் - அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் 


 
இருப்பிடம் : மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம். இவ்வூரைச் சுற்றி பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவை உள்ளன

அனுஷம் - அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில் 

 
 இருப்பிடம்: மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீ. தூரத்தில் திரு நின்றியூர் என்னும் ஊரில் இத்தலம் அமைந்துள்ளது. 

கேட்டை - அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் 


 
 இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.

மூலம் - அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில்
  
 

 இருப்பிடம்: சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்தில் மப்பேடு என்ற ஊரில்  உள்ளது. (பூந்தமல்லியிலிருந்து (22 கி.மீ.) பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.)

பூராடம் -  அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்

 
 இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.

உத்திராடம் - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் 


 
 இருப்பிடம்: சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ.,) ஒக்கூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., சென்றால் பூங்குடி என்ற ஊரில் உள்ளது. ஆட்டோ உண்டு. மதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நேரடி பஸ் வசதி உண்டு.

திருவோணம் -  பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்

 

இருப்பிடம்: வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள
காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ. சென்றால் திருப்பாற் கடலை அடையலாம். ஆற்காடு, வாலாஜா விலிருந்தும் பேருந்துகள் உள்ளன. இவ்வூரில் இரண்டு பெருமாள் கோயில்கள் இருப்பதால், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் என கேட்டு செல்லவும்


அவிட்டம் - அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில் 


 
 இருப்பிடம் : கும்பகோணம் மகாமகக்குளம் மேற்குக் கரையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கோயில்அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் கொருக்கை என்னும் இடத்தில் உள்ளது.. 

சதயம் -  அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்

 
இருப்பிடம்: திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் என்னும் ஊரில் உள்ளது.


பூரட்டாதி - அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில்
  


இருப்பிடம்: திருவையாறிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள திருக் காட்டுப்பள்ளி சென்று, அங்கிருந்து அகரப் பேட்டை செல்லும் ரோட்டில் 2 கி.மீ. தூரம் சென்றால் ரங்கநாதபுரம் என்னும் ஊரில் உள்ளது. 

உத்திரட்டாதி - அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில் 


 
இருப்பிடம்: புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ.தூரத்திலுள்ள ஆவுடையார்கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் வழியில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது.  மதுரையில் இருந்து செல்பவர்கள், அறந்தாங்கி சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் பஸ்களில் சென்றால் தீயத்தூர் என்னும் இடத்தில் உள்ளது. தூரம் 120 கி.மீ. 

ரேவதி - அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் 


 
 இருப்பிடம்: திருச்சியிலிருந்து முசிறி (40கி.மீ)சென்று, அங்கிருந்து வேறு பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீ) செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காருகுடி என்னும் இடத்தில் உள்ளத