Friday 23 September 2011

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க சில எளிய டிப்ஸ்

பக்கத்து வீட்டுப் பிள்ளைகள்லாம் ஸ்கூல் first , district first னு வர்றப்போ , நம்ம வீட்டுப் பசங்க கொஞ்சம் கம்மியா மதிப்பெண் எடுத்தா மனசு கஷ்டமாத்தான் இருக்கும். ஆரம்பத்திலே இருந்தே, உங்க குழந்தைங்க , நல்ல புத்திசாலியா வர, சில எளிய டிப்ஸ் இங்கே கொடுக்கிறேன். அக்கறையும், ஆர்வமும் இருந்தா எதிலேயும் ஜெயிக்கலாம். ட்ரை பண்ணிப் பாருங்க..

 நாம் பார்க்கும் , கேட்க்கும் , உணரும் , சுவைக்கும் , முகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும் . இது முதலில் முதலில் குறைந்த நேரமே மனதில் இருக்கும் (சென்சரி மெமரி ). உடனே மறந்து விடும் .

இந்த சென்சரி மெமரியில் நாம் முழு கவனத்தை செலுத்தி ஆழ்ந்து கவனித்தால் அது ஷார்ட் டெர்ம் மெமரி ஆக பதிவாகும் .இதுவும் சில மணித்துளிகளுக்கு மட்டும் இருக்கும் .

ஷார்ட் டெர்ம் மெமரி ஐ திரும்ப திரும்ப செய்யும்போது அது நாள் பட்ட ஞாபக சக்தியாக மாறும் .

எனவே ஞாபக சக்திக்கு மிகவும் முக்கிமானது இரண்டு :
ஆர்வம் மற்றும் கவனம் 

திரும்ப திரும்ப செய்தல்
 .

 மேலும் நாள் பட்ட ஞாபகம் கூட மறக்க வாய்ப்பு உள்ளது , இதுவும் நல்லது தான் . சில சமயம் வாழ் நாள் முழுதும் நினைவில் இருக்கும்.நாள் பட்ட ஞாபகத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம் :
explicit & implicit

explicit என்பது கொஞ்சம் யோசித்தால் நினைவுக்கு கொண்டுவர முடியும்

implicit என்பது யோசிக்க தேவை இல்லாமல் உடனே நினைவுக்கு கொண்டு வருதல்

 நினைவுத்  திறனை சிறு உதாரணம் கொண்டு விளக்கலாம் :
மிதி வண்டி ஓட்ட பழகுதலை எடுத்துகொள்வோம்


யாரோ ஓட்டுவதை நாம் பார்ப்பது - சென்சரி மெமரி
முதன் முதல் ஓட்ட காற்று கொள்வது - ஷார்ட் டெர்ம் மெமரி
தத்தி தத்தி ஓட்டுவது - லாங் டெர்ம் explicit மெமரி
தயவே இல்லாமல் ஓட்டுவது -லாங் டெர்ம் implicit மெமரி (சாகும் வரை மறக்காது )


இனி நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள் 


1 . எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும் , நீங்கள் படிப்பது ஆங்கிலமோ , ஹிந்தியோ , பிரெஞ்சோ - உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய செய்ய வேண்டும்


2 . புரியாமல் எதையும் படிக்க கூடாது . ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை .

3 . முழு கவனம் மிக அவசியம் .


4 . mnemonics வைத்து படிப்பது ஒரு கலை . அதை உங்கள் குழந்தைக்கு கற்று  கொடுங்கள்
Example -  news - north ,east,west,south ....

5 . படித்த வுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் . ஹோம் வொர்க் என்ற பெயரில் கடமைக்கு எழுதும் சடங்கு பயனில்லை.

6 . படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும் . பட விளக்கங்களை திரும்ப திரும்ப வரைந்து பார்க்க சொல்லவேண்டும்

7 . நல்ல உறக்கம் அவசியம் . குறைந்தது 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாக தேவை


8 .இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்லவேண்டும் .

9 . தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை மேலோட்டமாக நினைவு படுத்தி பார்க்க வேண்டும் . அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் விழிப்புடன் இருந்து தகவல் களை ஷர்ட் டெர்ம் மெமரியில் இருந்து லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான பயிற்சி ஆகும் .

10 . மாவு சத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும் , எனவே புரதம் நிறைந்த எளிதில்  செரிக்கும் உணவை சேர்த்துக்  கொள்வது நல்லது. 

Thursday 22 September 2011

அகஸ்தியரின் மகிமைகள் - சுவாரஸ்யமான தகவல்கள்

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRXA4W6lrUZNfvnCOl-pgj72RPMBXr2ql1xCFYdWvFjT_auVEbD6w
அகத்தியர் தோற்றம் பற்றி பல விதமாகக்  கூறப்படுகிறது. தாரகன் முதலிய அரக்கர்கள் 
உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும், குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் என்றும் கருத்துகள் நிலவுகின்றன.

முன்பு தேவர்களை வருத்திய அசுரர் இப்போதும் வருத்த ஆரம்பித்தனர். இந்திரன் அவர்களை அழிக்க வரும்போது அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்து கொண்டனர். தேவேந்திரன் வேண்டுகோளுக்கிணங்க அகத்தியர் சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர்.

அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை பெற்றார்.கயிலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. அதனால் அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார்.

மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று கூறிச் சென்ற அகத்தியர் மீண்டும் வடதிசை செல்லாததால் விந்திய மலையும் உயரவில்லை.
இராமபிரானுக்கு சிவகீதையை போதித்துள்ளார் அகத்தியர்.



சுவேதன் என்பவன் பிணந்தின்னுமாறு பெற்றிருந்த சாபத்தை போக்கினார். தமக்கு வழிபாடு செய்யாது யோகத்தில் அமர்ந்திருந்த இந்திரத்துய்மன் என்பவனை யானையாகுமாறு சபித்தார்.
அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார்.


தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி “அகத்தியம்” என்னும் நூலை இயற்றினார்.
அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.


வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கறி சமைத்து படைத்து வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர் இதனை அகத்தியரிடம் முறையிட்டனர். அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.


சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் ‘காக உரு’ கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது.


இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர்.


தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார்.


புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம் என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர்.


சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம் வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது.


அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
அகத்தியர் தென்நாடு வந்த வரலாற்றை ஆய்வியல் நோக்கில் திரு.N. கந்தசாமி பிள்ளையின் சித்த மருத்துவ வரலாறு நூலில் காணலாம்.
அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். 


அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.

அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றி கூறியுள்ளார். மேலும் அவர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:
1. அகத்தியர் வெண்பா
2. அகத்தியர் வைத்தியக் கொம்மி
3. அகத்தியர் வைத்திய ரத்னாகரம்
4. அகத்தியர் வைத்தியக் கண்ணாடி
5. அகத்தியர் வைத்தியம் 1500
6. அகத்தியர் வைத்திய சிந்தாமணி
7. அகத்தியர் கர்ப்பசூத்திரம்
8. அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்
9. அகத்தியர் வைத்தியம் 4600
10. அகத்தியர் செந்தூரம் 300
11. அகத்தியர் மணி 4000
12. அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு
13. அகத்தியர் பஸ்மம் 200
14. அகத்தியர் நாடி சாஸ்திரம்
15. அகத்தியர் பக்ஷணி
16. அகத்தியர் கரிசில் பஸ்யம் 200
17. சிவசாலம்
18. சக்தி சாலம்
19. சண்முக சாலம்
20. ஆறெழுத்தந்தாதி
21. காம வியாபகம்
22. விதி நூண் மூவகை காண்டம்
23. அகத்தியர் பூசாவிதி
24. அகத்தியர் சூத்திரம் 30
25. அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம்
26 அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் இவரால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.


அகத்தியர் பெருமானின் பூசை முறைகள்


தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் இரு முக தீபம் ஏற்றி வைக்க வேண்டும். படத்தின் முன்பாக பித்தளை அல்லது செம்பு அல்லது வெள்ளியினால் செய்யப்பட்ட உருண்டையான செம்பில் சுத்தமான தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும்.


பின் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார கூறி பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை சொல்லி வில்வம், துளசி, கதிர்பச்சை, விபூதி பச்சை போன்ற பச்சிலைகளைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.


பதினாறு போற்றிகள்:


1. தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
2. சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!
3. தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
4. விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
5. கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
6. சித்த வைத்திய சிகரமே போற்றி!
7. சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
8. இசைஞான ஜோதியே போற்றி!
9. உலோப முத்திரையின் பதியே போற்றி!
10. காவேரி தந்த கருணையே போற்றி!
11. அகத்தியம் தந்த அருளே போற்றி!
12. இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!
13. அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
14. அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
15. இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
16. இன்னல்கள் போற்றி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!


நிவேதனம்


பஞ்சாமிர்தம், பழங்கள், சக்கரைப்பொங்கல், இளநீர் போன்றவற்றுடன் இளம் பச்சை நிற வஸ்திரம் அணிவித்து புதன்கிழமை பூசை செய்யவும். நிறைவாக “ஓம் ஸ்ரீம் அகத்திய முனிவரே போற்றி!” என்று 108 முறை சொல்லி ஆராதனை செய்ய வேண்டும்.


அகத்திய முனிவரின் பூசா பலன்கள்


1. இசையிலும் கவிதையிலும் மேன்மையுண்டாகும்.
2. கல்வித்தடை நீங்கும்.
3. புதன் பகவானால் உண்டான தோஷம் நீங்கும்.
4. முன்வினை பாவங்கள் அகலும்.
5. பித்ருசாபம் நீங்கி அவர்களின் ஆசி கிடைக்கும்.
6. பேரும், புகழும், மதிப்பும் தேடி வரும்.
7. பூர்விக சொத்துக்கள் கிடைக்கும்.
8. சகலவிதமான நோய்களும் தீரும்.
9. குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.


நன்றி : அகஸ்திய விஜயம் 

நம்பியவருக்கு நான் என்றும் துணை நிற்கிறேன்... - அம்மன்குடி ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரி !


வழிபடும் முறைகள் , முறையான மந்திர ஜெபங்கள் தெளிவாக தெரிந்து இருந்தால் , ஒவ்வொரு ஆலயமும் நமக்கு பொக்கிஷங்கள். ஆனால், அது எல்லாம் அவ்வளவு எளிதில் கிடைத்து விட்டால், தெரிந்து விட்டால் , தண்டனைகளுக்கும் நம் ஆட்கள் விலை பேச ஆரம்பித்து விடுவார்களே..
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcT96pZlDgPDCKHDvOPaAnCX0sspXHgreWIXBVXNyC7Q-fdYMSIe
இந்த பாவமா, சரி - இதுதான் பரிகாரம், இவ்வளவு ரேட் ஆகும்? என்ன சொல்றே..? இந்த ரேஞ்சுக்குத் தான் போய்விடும்.. செஞ்ச தப்புக்கு, தண்டனை அனுபவிச்சு, இவ்வளவு கஷ்டம் அந்த தப்புனாலதான்னு - அவர் உணர்ந்து , மனப் பூர்வமாக  , இனி அந்த தவறை செய்வதில்லை என்று உணரும் வரை, பரிகாரங்கள் எதுவும் பலன் அளிப்பதில்லை. தெய்வமும், கண்ணை மூடிக் கொண்டு , கல்லாகவே இருந்து விடும்.

அதெல்லாம் ஓகே, நிஜமாவே கடவுள் இருக்கிறாரா? நாமதான் பைத்தியக்காரன் மாதிரி , கோவில் கோவிலா சுத்திக்கிட்டு இருக்கிறோமே, ஒருவேளை - இதெல்லாம் ஒண்ணுமே இல்லைன்னு ஆகிட்டா....? 
நிஜமா , நெஞ்சை தொட்டு சொன்னா , இந்த மாதிரி பயம் நம்ம எல்லோருக்குமே இருக்கும். ஒருவேளை எல்லாமே , பொய் தானோ..?  பணமும், நேரமும் விரயம் தானோ..?
  
சரி, இந்த நேரத்தை ரொம்ப ஆக்கப்பூர்வமா , வேறு ஏதாவது செய்ய முடிஞ்சா 
உருப்படியா நல்ல விஷயங்கள் செய்ய முடிஞ்சா , தாராளமா செய்யுங்க. உங்களை வருத்தி , நீங்கள் செய்யும் முயற்சி - கண்டிப்பாக தெய்வம் கொடுக்கும் வரம் போல தான். கடவுளை மட்டும் நம்பிக்கிட்டு, சோம்பேறித்தனமா சுத்திக்கிட்டு இருக்கிறதுக்கு இது எவ்வளவோ மேல்.. !

அதை விட்டுட்டு, புகை , குடி போதை , பொண்ணுங்க சகவாசம் இப்படி கெட்டுப் போறதுக்கு - கோவில் கோவிலா போயி நேரம் விரயம் ஆனாக் கூட பரவா இல்லை. பிறந்ததே சினிமா பார்க்க , சினிமா சம்பந்தமா செய்திகள் படிக்க மட்டுமேனு இன்னும் நிறையே பேர் இருக்கிறாங்க. 

இண்டர்நெட்லேயும் , அதுக்கு ஏத்த மாதிரி - கலர் , கலரா , உரிச்ச கோழிகளா , கவர்ச்சிப் படங்களை போட்டு , இந்த மாதிரி பசங்களை மேலே யோசிக்க கூட விடாம , ஒரு பெரிய கூட்டமே இருக்கு. இப்படியே , ஒருவேளை வாழ்க்கை முடிஞ்சு போயிட்டா , பாவம் இவங்கள்லாம் என்ன செய்வாங்களோ தெரியலை..

அடப் பூ.. இவ்வளவுதானானு ..அவங்க ஒரு கால கட்டத்துலே யோசிக்கிறப்போ..காலம் , எங்கேயோ கடந்து போய் நிற்கும்..! இந்த மாதிரி , என்ன செய்றோம்னே தெரியாம , காலத்தை கடத்துறதுக்கு ,தெய்வ அனுக்கிரகம் வேண்டி காலம் கடத்துறது எவ்வளவோ பரவா இல்லைன்னு நான் நினைக்கிறேன்.. 

என்னுடைய வெளி நாட்டு  நண்பர் , சென்ற முறை திருவண்ணாமலை போனப்போ ஒரு கேள்வி கேட்டார்.

ஒருவேளை கடவுள்னு ஒருத்தரும் இல்லை , எல்லாமே கற்பனை தான்னு ஆகிட்டா என்ன பண்ணுவீங்க? 

ஒரு வினாடி எனக்கு ரொம்ப மனசு கஷ்டமாகிடுச்சு. அப்புறமா சொன்னேன்.. ஒருவேளை கடவுள் இல்லைன்னு ஆயிடுச்சுன்னா, அதனாலே பாதிக்கப் படுறதுலே நான் முதல் ஆளா இருப்பேன் சார். 

நீங்க எப்படி பாதிப்பு அடைவீங்க? 

ஏதோ , இவ்வளவு நாள், ஏனோ தானோன்னு ஓடிடுச்சு. கஷ்டப்பட்டுட்டோம். ரொம்பவே மனசு வேதனை, ஏமாற்றம், நம்பிக்கை துரோகம், அதனாலே இழப்பு, வலி, வேதனை எல்லாம் அனுபவிச்சுட்டேன்.  என்னைக்காவது ஒரு நாள் , அந்த ஆண்டவன் கை கொடுத்து மேலே தூக்கிவிடுவான்னு நம்பிக்கைல தான், தொடர்ந்து போராடிக்கிட்டு இருக்கிறேன்.. அப்படி இருக்கிறப்போ , அப்படி ஒன்னுமே இல்லைனா , நொறுங்கிப் போயிடுவேன் சார் னு சொன்னேன்.

ஒரு நிமிஷம் என் கண்ணை உத்துப் பார்த்தார் . அவருக்கு என்ன தோணியதோ , தெரியலை. 

கவலையே படாதீங்க.. ! மத்தவங்களுக்கு எப்படியோ, உங்களுக்கு, உங்க நல்ல மனசுக்கு , அந்த ஆண்டவன் கண்டிப்பா உங்களை நல்ல நிலைல வைப்பான். உங்க கிட்ட அந்த கடவுளை நான் பார்க்கிறேன்னார்..!

ஏன் கிட்ட அவர் பார்த்தாரோ இல்லையோ, அவரோட அன்பான வார்த்தைகள்..., அந்த அண்ணாமலையாரோட வார்த்தையாகத் தான் நான் உணர்ந்தேன். 

அதன்பிறகு ஒவ்வொரு நாளும், அந்த இறைவனின் அண்மையை நான் உணரும்படி , எனக்கு கிடைத்துக் கொண்டு இருக்கும் அற்புத அனுபவங்கள் , ஏராளம். மிகப் பழமை வாய்ந்த, அதே சமயம் காலம் காலமாக - பலரது வாழ்க்கையில் அதிசயங்கள் நிகழ்த்திக் கொண்டு இருக்கும் ஆலயங்கள் பற்றி , என்னுடைய தேடல் தொடங்கி , இன்னும் சென்று கொண்டே இருக்கிறது. 

நமக்கு மட்டும் எல்லாம் கிடைச்சிட்டாப் போதுமா ? நமக்கு தெரிந்த விஷயங்களை , ஒரு நாலு பேருக்கிட்ட  பகிர்ந்து கொள்ளலாமே   என்று எண்ணியதில் ஆரம்பித்ததுதான் இந்த இணைய தள முயற்சி.

சரி , விஷயத்துக்கு வருவோம்..!

சுமார் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக , தன்னை நம்புபவர்களுக்கு, வேண்டுவனவற்றை வாரி வழங்கி, வெற்றி மேல் வெற்றி பெற வைத்து - புகழின் உச்சியில் வைத்து , குதூகலமடையச் செய்பவள் - அன்னை துர்க்கா பரமேஸ்வரி. சத்தமே இல்லாமல் ,ஏராளமான அரசியல் வாதிகளும், கலை உலகை சேர்ந்தவர்களும், ஆன்மீக தொண்டர்களும் - ஆசி பெற்றுச் சென்று கொண்டு இருக்கும் அன்னை இவள்.

இந்து மதம் மிக மிகப் பழமையானது. தோற்றம் பற்றிய எந்த விபரங்களும் இல்லாததே இதற்கு சிறந்த சான்று. இறைவனால் நமக்கு அளிக்கப்பட்டு, சமயப் பெரியோரால் வளர்க்கப்பட்டது.  மதம் சார்ந்த பல நம்பிக்கைகளையும், அதனைச் சார்ந்த பல வழிபாட்டு முறைகளையும் கொண்டது. உருவ வழிபாடு, மந்திரங்கள் ஜெபிப்பது, பிரார்த்தனை வேண்டுவது, பூரண நிலையாய் தியானம் செய்வது என பல வழிபாட்டு நிலைகளை உணர்த்துவது. அனைத்து உயிர்களும் தெய்வத் தன்மை கொண்டிருந்தாலும், தன்னுள் கொண்ட தெய்வத்தன்மையை வெளிக் கொண்டு வருவது மனிதர்களால் மட்டுமே முடியும்.

இதையே " ஞானம் பெறுவது " என்கின்றன நமது சாஸ்திரங்கள். மனிதன் ஞானம் அடைவதற்கு வழி வகுப்பதே இந்து மதத்தின் அடிப்படை நோக்கம். வழிபாட்டின் முதல் நிலையாம் " உருவ வழிபாட்டின் " பொருட்டு நமது முன்னோர்களால் அளிக்கப்பட்ட "திருக் கோவில்களின் " பெருமைகளையும், சிறப்புகளையும் தெரிந்து கோண்டு கடவுளை வழிபடுவது ஒரு ஆத்மார்த்தமான அனுபவம். முறை உணர்ந்த இறை வழிபாடே நன்மை பயக்கும். பூர்வ ஜென்மம் , நல வினை , தீவினை அதன் மூலம் கர்ம வினைகள் என்று தெளிவாக நம் சாஸ்திரங்கள் எடுத்து உரைக்கின்றன. நமக்கு தெளிவாக எடுத்துச் சொல்லத்தான் , யாரும் கிடைப்பதில்லை.  

சில நாவல்களை  சரித்திர கதைகளை படிக்கும்போது ,  நமக்கும் அந்த சரித்திரத்துக்கும் எதோ ஒரு சம்பந்தம் இருக்குமோ என்கிற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடிவதில்லை. மிக முக்கியமாக கல்கியின் பொன்னியின் செல்வனும், பால குமாரனின் உடையாரும் படித்தவர்கள், நிச்சயம் ஏதோ ஒரு கணமாவது இதை உணர்ந்து இருப்பீர்கள். 

அதை எழுதியவர்களின் அதீத திறமையா, இல்லை நிஜமாகவே நமக்கு எதுவும் தொடர்பு இருக்கிறதா , கடவுளுக்குத் தான் தெரியும். ஆனால் , கோவில் கட்டும் காலத்தில் நாம் உடன் இருந்தோமோ, இல்லையோ, ஆனால், போன பிறவி என்பது உண்மையாக இருந்தால் , நிச்சயம் இந்த ஆலயங்களை நாம் தரிசிக்க வந்து இருக்க கூடும். 

அப்படி காலத்தால் , அழியாத - சுமார் ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக இன்றும் அருள் அலைகள் , அளவு கடந்து வெளிப்படும் ஆலயங்கள் , நம் புண்ணிய தமிழ் நாட்டில் ஏராளம். அப்படிப் பட்ட , ஒரு ஆலயம் தான் இந்த அம்மன்குடி ஆலயம். சிறிய ஆலயம் தான்.

தமிழகத்தின் தலை சிறந்த மன்னன் என்று காலம் காலமாக , நம் நினைவில் நிற்கும் ராஜ ராஜ சோழனின் - இளமைப் பருவத்திலிருந்து , கடைசி வரை - வலக்கரமும் , இடக்கரமுமாக இருந்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் வந்தியத் தேவன். இன்னொருவர்  அநிருத்தப் பிரம்மராயர் என்று அழைக்கப் பட்ட , அந்தணர்கள் சமூகத்தை சேர்ந்தவர். இவரும் பெரிய வீரர். சோழ மண்டலமே , மரியாதை செலுத்திய மாமனிதர் - பிரம்மராயர். 

 அந்தணர்களில்இப்படி ஒரு வீரரா, அந்த காலத்தில் என்று நினைக்கிறீர்களா? அவரைப் பற்றி நீங்கள் தெரிந்துகொண்டால், மேலும் வியப்படைவீர்கள். இவரை ஆட்கொண்டு , இவர் மூலமாக நம் தமிழ் நாடு முழுவதும் அருள் மழை பொழிந்தவள் அன்னை பரமேஸ்வரி.

இவர்,ராஜ ராஜனின் சேனாதிபதியாக, மதி மந்திரியாக இருந்தவர். மும்முடிச்சோழ பிரம்மராயர் ஸ்ரீ கிருஷ்ணன் ராமன் என்பது அவர் பெயர்.  அவர் பிறந்து வளர்ந்த இடம்  இந்த அம்மன் குடி. இந்த துர்க்கையை வணங்கி , அவர் பெற்ற சக்தி ஏராளம். அவரது அத்தனை வெற்றிக்கும், கீர்த்திக்கும் இந்த அன்னையின் ஆசிதான் காரணம்.

அன்னையின் சக்தி அறிந்து - ராஜ ராஜனும், அவனது பட்ட மகிஷிகளும், ராஜேந்திர சோழனும் என்று அந்த காலத்தில் , அனைவரும் வந்து வணங்கி அன்னையின் அருள் பெற்று , மாபெரும் சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தனர். 

சோழ மண்டலத்திற்கும், தனக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் என்று எண்ணுபவர்கள், ஒருமுறை இந்த அம்மன்குடி வந்து பாருங்கள்.. நீங்கள் பிரமிக்கப் போவது உறுதி..!

சரி, இனி என் அன்னை துர்கா பரமேஸ்வரி - கோலோச்சும் அந்த அம்மன்குடி ஆலயத்தை பற்றி, ஸ்தல வரலாறு பற்றி , காண்போம். !

வரலாறு : மகிஷாசுரனை வதம் செய்த பிறகு அம்பாளை பாவம் பற்றியது. அவள் தனது பாவத்தை தீர்க்க இடம் தேடி அலைந்தாள். துக்காட்சி என்ற இடத்திற்கு வந்து தனது ஆட்சியை ஆரம்பித்தாள். இதன்பிறகு தனது சூலத்தில் படிந்திருந்த ரத்தக்கறையை கழுவுவதற்கு இடம் தேடினாள். துக்காட்சியின் அருகிலுள்ள ஒரு குளத்தில் தனது சூலத்தை கழுவினாள். அங்கு அவளுக்கு பாப விமோசனம் ஏற்பட்டது. தீர்த்தத்திற்கு "பாப விமோசன தீர்த்தம்' என பெயர் ஏற்பட்டது. தன் பாவம் தீர்ந்த பூமியில் குடியிருக்க துர்க்காதேவி விரும்பினாள். அங்கேயே குடியிருந்ததால் இவ்வூருக்கு அம்மன்குடி என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் சிவலிங்கம், விநாயகர் ஆகியோரை பிரதிஷ்டை செய்து அம்பாள் வழிபட்டாள்.

சிறப்பு : இத்தலத்தில் உள்ள விநாயகரின் சிற்பம் சாளக்கிரமத்தால் ஆனது. காலையில் பச்சை, மதியம் நீல நிறம், மீண்டும் மாலையில் பச்சை நிறமாக மாறிவிடும் தன்மை கொண்டது. சிவனை தன்னுள் அடக்கிய துர்க்கை ஸ்தலம். ஒரு சிவன் கோயிலில் துர்க்காதேவிக்கு கிழக்கு நோக்கிய சன்னதி அமைந்துள்ளது இதன் தனி சிறப்பாகும்.

திறக்கும் நேரம் :
 காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

பொது தகவல் :  இக்கோயில் கி.பி.944ல் கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான கோயில் இது. இங்கு பார்வதிக்கு தனி சன்னதி உள்ளது.


பிரார்த்தனை :  திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விழங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நாகதோஷம் உள்ளவர்கள் இங்குள்ள விநாயகரை வழிபடுகின்றனர்.


நேர்த்திக்கடன் : சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் அணிவித்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

தல சிறப்பு : அம்பாளுக்கு முக்கியத்துவம் தரும் இடமாக இருந்தாலும் இக்கோயிலில் கைலாசநாதரே மூலவராக இருக்கிறார். அம்பாள் துர்க்கா பரமேஸ்வரி என்ற பெயரில் எட்டு கைகளுடன் காட்சி தருகிறாள். மகிஷாசுரமர்த்தினி என்றும் இவளை கூறுகிறார்கள். ஒரு சிவன் கோயிலில் துர்க்காதேவிக்கு கிழக்கு நோக்கிய சன்னதி அமைந்துள்ளது இதன் தனி சிறப்பாகும்.  நவக்கிரகங்களுக்கு அதிபதியாக துர்க்கை விளங்குவதால் இங்கு நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி கிடையாது. செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ பூஜை உண்டு.

அதிசய விநாயகர்:
 இத்தலத்தில் உள்ள விநாயகரின் சிற்பம் சாளக்கிரமத்தால் ஆனது. காலையில் பச்சை, மதியம் நீல நிறம், மீண்டும் மாலையில் பச்சை நிறமாக மாறிவிடும் தன்மை கொண்டது. வழுவழுப்பான கல்லால் ஆனது. விநாயகரின் வயிற்றில் நாகம் உள்ளது. எனவே நாகதோஷம் உள்ளவர்கள் இந்த விநாயகரை வழிபடுகின்றனர். கையில் தவசுமாலை வைத்துள்ளார். இவருக்கு தபசு மரகத விநாயகர் என்ற பெயர் வழங்கப்படுகிறது. விநாயகரின் துதிக்கை அவரது உடலோடு ஒட்டாமல் துளையிட்டு சிற்பத்திறமையுடன் செய்யப்பட்டுள்ளது.

அந்த வினாயகர் வெளிச்சத்தில் ஒரு நிறமும், இருட்டில் ஒரு நிறமுமாக இருப்பார். வெளிச்சம் பட அந்த வினாயகரின் நிறம் வெள்ளையாக இருக்கும். சற்று மழைமேகம் திரண்டால் வினாயகரின் மேனி கருப்பாகி விடும். அந்தக்கல் நிறம் மாறுவதை கண்கூடாகப் பார்க்கலாம். 

இங்குள்ள சூரியன் குழந்தை வடிவ தோற்றத்தில் உள்ளார். எனவே இவரது காலில் "தண்டை' என்ற அணிகலன் அணியப்பெற்றுள்ளது. இந்த அணிகலனை குழந்தைகளே அணிவார்கள். இங்குள்ள துர்க்கைக்கு நூறு கண்கள் இருப்பதாக ஐதீகம். மழை இல்லாத காலங்களில் இந்த அம்பிகைக்கு பூஜை செய்தால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை. இங்கு யோகசரஸ்வதி சிலையும் உள்ளது. சரஸ்வதியின் கையில் வீணை இல்லை. இதற்குபதிலாக தவத்தில் ஆழ்ந்திருப்பது போல் சரஸ்வதி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கைலாசநாதரின் வலதுபாகத்தில் துர்க்கை காட்சி தருகிறாள். எட்டு கைகளுடன் எட்டுவித ஆயுதங்கள் தாங்க சிம்ம வாகனம், மகிஷன் தலை ஆகியவற்றுடன் சாந்த முகத்துடன் காட்சி தருகிறாள்.

அடுத்த முறை , கும்பகோணம்  செல்லும்போது - அவசியம் இந்த கோவிலுக்கும் சென்று வாருங்கள். கும்பகோணத்தில் இருந்து , உப்பிலியப்பன் கோவில் வழியாக இந்த ஊருக்கு செல்ல வேண்டும். 

அந்த பராசக்தியின் அருள் நம் எல்லோருக்கும் கிடைக்க மனமார வேண்டுகிறேன்..! 

Tuesday 20 September 2011

அறுபத்து மூவர் வரலாறு (நாயன்மார்கள்) - ஓர் அறிமுகம்

  வணக்கம் தோழர்களே, உலகத்தின் ஆன்மா இந்தியா என்பார்கள். எனில், ஆன்மிகத்தின் இதயமாய் தமிழகம் இருந்து வருகிறது.  
இந்துமதம் மிகத்  தொன்மையானது. அதன் பெரும்பிரிவான சைவம் பல அடியார்களால் வளர்க்கப்பட்டு மேன்மையுற்றது. சிவ வழிபாடு என்பது ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது. 
             கி. பி.- ஏழாம் நூற்றாண்டை சைவ சமயத்தின் பொற்காலம் எனலாம்.இந்த நூற்றாண்டில்தான் அப்பரும், ஞான சம்பந்தரும் தோன்றி நலிவுற்ற சைவத்தை நிலைபெற்று ஓங்கச் செய்தனர். இவர்கள் காலத்தில், சைவமும் பக்தியும் சிறக்க வாழ்ந்தோரையே நாம் நாயன்மார்கள் என்கிறோம். 
              நாயன்மார்கள் தொண்டினைப் போலவே, வாழ்க்கை முறையிலும் தனிப்பட்ட சிறப்பினைக் கொண்டவர்கள். நாயன்மார்கள் எத்தகைய துன்பங்கள் வந்த போதும் தனது சிவத்தொண்டிலும், பக்தியிலும் எத்தகைய மாறுபாடும் காட்டாது, பக்தியே பரமானந்தம் என்று, ஒரே நிலையில் உறுதிபட இருந்தார்கள். அவர்கள் பொதுத் தொண்டில் ஈடுபாடு கொண்டிருந்த காலங்களில், அவர்களோடு, அவர்தம் மனைவிமார்களும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
             நாயன்மார்களின் வரலாறான பெரிய புராணம் சைவத்தின் முக்கிய ஆவணம். தமிழின் இலக்கிய மேம்பாட்டுக்கு கிடைத்த மிகப்பெரும் பொக்கிஷம். சேக்கிழார் தமது 4281 பாடல்களில் விரித்துரைத்த திருத்தொண்டர் பராணத்தை (பெரிய புராணம்) ஆதாரமாய் கொண்டு, அடியேன் அந்த அறுபது மூவர் வரலாறையும் இந்து இணைய பக்கத்தில் வெளியிடவிருக்கிறேன். ஆன்றோரும் சான்றோரும் கற்றோரும் இறையருள் பெற்றோரும் துணை நிற்குமாறும், என்னுள் இருந்து தன்னைச் செலுத்தும் இறைவன் பாதம் பணிந்து படைக்கிறேன்.... நன்றி.......  

எண்
பெயர்குலம்இடம் 
1அதிபத்தர்பரதவர்நாகப்பட்டினம் 
2அப்பூதியடிகள்அந்தணர்திங்களூர் 
3அமர்நீதி நாயனார்வணிகர்பழையாறை 
4அரிவட்டாயர்வேளாளர்புள்ளமங்கலம்
5ஆனாய நாயனார்இடையர்திருமங்கலம் 
6இசைஞானியார்ஆதி சைவர்திருவாரூர் 
7இடங்கழி நாயனார்செங்குந்தர் குல குறுநில மன்னர்புதுக்கோட்டை 
8இயற்பகை நாயனார்வணிகர்காவிரிப்பூம்பட்டினம்  
9இளையான்குடிமாறார்வேளாளர்இளையான்குடி 
10உருத்திர பசுபதி நாயனார்அந்தணர்திறுத்தளையூர்
11எறிபத்த நாயனார்
செங்குந்தர் 
கரூர் 
12ஏயர்கோன் கலிகாமர்வேளாளர்பெருமங்கலம் 
13ஏனாதி நாதர்சான்றார்ஏனா நல்லூர் 
14ஐயடிகள் காடவர்கோன்குறுநில மன்னர்காஞ்சி 
15கணநாதர்அந்தணர்சீர்காழி 
16கணம்புல்லர்
செங்குந்தர் 
சிதம்பரம் 
17கண்ணப்பர்வேடர்காலஹஸ்தி
18கலிய நாயனார்செக்கார்திருவொற்றியூர் 
19கழறிற்றறிவார்அரசர்கொடுங்கோளூர் 
20கழற்சிங்கர்குறுநில மன்னர்காஞ்சி 
21காரி நாயனார்
செங்குந்தர் 
திருக்கடையூர் 
22காரைக்கால் அம்மையார்வணிகர்காரைக்கால் 
23குங்கிலியகலையனார்அந்தணர்திருக்கடையூர் 
24குலச்சிறையார்மரபறியார்மணமேற்குடி
25கூற்றுவர்
செங்குந்தர் குல குறுநில மன்னர்
களப்பால்
26கலிக்கம்ப நாயனார்வணிகர்பெண்ணாடகம் 
27கோச் செங்கட் சோழன்அரசன்திருவானைக்கா
28கோட்புலி நாயனார்வேளாளர்திருநாடியத்தான்குடி 
29சடைய நாயனார்ஆதி சைவர்திருநாவலூர் 
30சண்டேஸ்வர நாயனார்அந்தணர்செயஞலூர் 
31சத்தி நாயனார்வேளாளர்இரிஞூர்
32சாக்கியர்வேளாளர்சங்கமங்கை 
33சிறப்புலி நாயனார்அந்தணர்ஆக்கூர் 
34சிறுதொண்டர்சாலியர்திருசெங்காட்டங்குடி 
35சுந்தரமூர்த்தி நாயனார்ஆதி சைவர்திருநாவலூர் 
36செருத்துணை நாயனார்வேளாளர்திருக்கண்ணபுரம் 
37சோமசிமாறர்அந்தணர்அம்பரகத்தூர் 
38தண்டியடிகள்
செங்குந்தர்
திருவாரூர் 
39திருக்குறிப்புத் தொண்டர்ஏகாலியர்காஞ்சி 
40திருஞானசம்பந்தமூர்த்திஅந்தணர்சீர்காழி 
41திருநாவுக்கரசர்வேளாளர்திருவாமூர் 
42திருநாளை போவார்புலையர்ஆதனூர் 
43திருநீலகண்டர்குயவர்சிதம்பரம் 
44திருநீலகண்ட யாழ்ப்பாணர்பாணர்ராசேந்திர பட்டினம் 
45திருநீலநக்க நாயனார்அந்தணர்சியாதமங்கை 
46திருமூலர்இடையர்திருவாவடுதுறை 
47நமிநந்தியடிகள்அந்தணர்திருநெய்ப்பேறு
48நரசிங்க முனையர்
செங்குந்தர் குல குறுநில மன்னர் 
சேந்தமங்கலம் 
49நின்றசீர் நெடுமாறன்அரசர்மதுரை 
50நேச நாயனார்சாலியர்மாயவரம் 
51புகழ்சோழன்அரசர்உறையூர் 
52புகழ்த்துணை நாயனார்ஆதி சைவர்அழகாபுத்தூர் 
53பூசலார்அந்தணர்திருநின்றவூர் 
54பெருமிழலைக் குறும்பர்
செங்குந்தர்
மிழலை 
55மங்கையர்க்கரசியார்அரசர்மதுரை 
56மானக்கஞ்சாற நாயனார்வேளாளர்ஆனதாண்டவபுரம்
57முருக நாயனார்அந்தணர்திருப்புகலூர் 
58முனையடுவார் நாயனார்வேளாளர்திருநீடூர் 
59மூர்க்க நாயனார்வேளாளர்திருவேற்காடு 
60மூர்த்தி நாயனார்வணிகர்மதுரை 
61மெய்ப்பொருள் நாயனார்
செங்குந்தர் குல குறுநில மன்னர்
திருக்கோவிலூர் 
62வாயிலார் நாயனார்வேளாளர்மைலாப்பூர் 
63விறன்மிண்ட நாயனார்வேளாளர்திருவாரூர்